காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா….
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் எண்ணற்ற பாடல்கள் திரையிசையில் வந்தாலும்,
“ஏழாவது மனிதன்” திரைப்படப் பாடல்கள் தனித்து நின்று மிளிரும்.
அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாரதியார் பாட்டுக்கும் தனித்துவம் மிகுந்த இசையளித்திருப்பார் எல்.வைத்யநாதன்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கையைப் படமாக்குவதற்காகத் தான் அவரின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து இசையமைத்தார்களாம். ஆனால் பாரதியின் குணாம்சம் என்பது புதிர் நிறைந்தது, அதைத் திரையில் அப்படியே கொண்டு வர முடியாது என்ற நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டு, பதிவு செய்த பாடல்கள் அனைத்தையும் புதிதாகத் தேர்ந்தெடுத்த கதைக்குப் பொருத்தப்பட்டு “ஏழாவது மனிதன்” உருவானான்.
இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ஹரிஹரன், சாய் வித் சித்ராவில் பகிர்ந்திருந்தார்.
பாரதியார் கதை இல்லாவிட்டாலும், சமூக சிந்தனை கொண்ட ஒரு கருப் பொருளை எடுத்துக் கொண்டு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்த ரகுவரன் நாயகன் ஆக்கப்பட்டு ஏழாவது மனிதன் உருவானது.
சிறந்த தமிழ்த்திரைப்படமாகத் தேசிய விருது கண்டது.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா”
https://youtu.be/d4TCldCmG_I?si=koVIHwC7u07EzD4G
எவ்வளவு மென்மை படைத்ததோ அதற்கு எதிர்மாறாக
உச்சி மீது
உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்பதே…
https://youtu.be/MBM_HFi3kdg?si=i8_y9A3DWgA1mR3w
SPB இன் நையாண்டித் தனமும் ஆக்ரோஷமும் கொண்ட குரல் அந்தப் பாடலின் தொனியை உயிர்ப்பிக்கும்.
“வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நானுனக்கு”
https://youtu.be/XordYIAkv1o?si=i6Kcm3JQyzkRY9C6
ஒரு காதல் படத்துக்கு பாரதியாரே பாட்டு எழுதியது போலத் தொனிக்கும்.
ஜேசுதாசோடு B.நீரஜாவின் அழகுப் பாடல்.
பாரதியாரின் கொள்ளுப் பேரன் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கும் இங்கே மகத்துவம் கொடுக்கப்பட்டது.
“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி”
இன்றுவரை ரசித்துப் போற்றப்படும் பாடல்களில் ஒன்று.
மேலும்
செந்தமிழ் நாட்டென்னும் போதினிலே, விடுதலை விடுதலை விடுதலை,
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, மனதில் உறுதி வேண்டும், எந்த நேரமும், நல்லதோர் வீணை செய்தே, ஓடி விளையாடு பாப்பா, ஆகாவென்றெழுந்தது பார்
என்று மொத்தம் 13 பாரதியார் பாடல்கள் ஏழாவது மனிதன் திரைப்படத்தில் கையாளப்பட்டது.
முழுப் பாடல் தொகுதி https://youtu.be/P4WWjlwUCsE?si=W5tp5ZTPMRMRdEdn
மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு தினத்தில் அவர் நினைவை அவர் தம் பாடல்களால் போற்றுவோம்.
❤️🙏
கானா பிரபா
11.09.2026

No comments:
Post a Comment