Pages

Wednesday, August 5, 2026

ஜானுவும் சுப்ரமணியமும்

 


கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாடசாமி….


https://youtu.be/CIl5itfu8yk?si=n-Afq3BJWdeDORxk


இழுத்து இழுத்து ஒரு தயக்கக் குரலோடு கொடுப்பார் அந்தக் குண்டுப் பையன்.

அதே பாட்டு தான் ஆனால் நூறு கிமீ வேகத்தோடு ஏற்றுவார் ஜானு.


https://youtu.be/biWEAGVc3nY?si=OYAaHlw6ejaQKIVt


ஒரு பாடலை ஆண் குரல், பெண் குரல் என்று தனித்தனியாக ஒரே பாடலைக் கொடுக்கும் மரபு திரையிசையில் இருக்கிறது.

அங்கு கூட எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரே உச்சபட்ச நியாயம் கற்பித்திருக்கிறார்கள்.


இன்னொன்றைப் பாருங்கள்


இங்கே மானமுள்ள 

பொண்ணு ஒண்ணை 

மனம் துடிக்க விட்டாக 

மறுதலிக்க வச்சாக….


https://youtu.be/Rru5bWyBHoU?si=qq9y98hYO05wW3J7


அடிபட்டுக் கீழே விழுந்த குரலாய் எஸ்பிபி.


என்னை மானமுள்ள 

பொண்ணு இன்னு

மருதையில கேட்டாக 

மன்னார்க்குடியில கேட்டாக

அந்த மாயவரத்துல கேட்டாக


https://youtu.be/BobkirXNQp0?si=ocqzmVF5g_RDBb2D


தெனாவெட்டு மரிக்கொழுந்தாய் அவதாரம் எடுப்பார் ஜானகி.


இவர்கள் ஒன்று சேர்ந்த “இதயம் ஒரு கோவில்” ஜானகி ஆலாபனை கொடுத்ததிலாகட்டும்

“பாடு நிலாவே தேன் கவிதை பூமலர”

ஜோடிப் பாடலிலாகட்டும் ஒற்றைப் பாடகராக ஒரு பிரமையை எழுப்புவார்கள்.


“நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது” ஜோடியாகப் பாடியவர்கள். பதிவு கானாபிரபா அங்கே தனித்து ஜானகிக்கு ஒற்றைப் பாடல் விதைத்திருக்கும்.


இதே மாதிரியான ஜோடிப் பரிமாணத்தில் “வைகை நதியோரம்” பாடலில் இணைந்தவர்கள், இங்கேயும் ஜானகிக்கும், இளையராஜாவுக்கும் ஒற்றைப் பாடல்கள் சோக ராகம் பாடும்.


“ஆடுங்கள் பாடுங்கள்” குரு படத்தின் எஸ்பிபி குழுப் பாடல் போல ஜானகிக்கும் ஒன்றுண்டு.


“காதலின் தீபம் ஒன்று” 

அலுக்க அலுக்க எஸ்பிபியைக் கேட்டாலும் அங்கேயும் ஜானகியின் தனிப் பாடலுக்கும் இதயத்தின் மறுபாதியைக் கொடுத்திருப்போம்.


ஜானகி


https://youtu.be/ix7QcsU7bmE?si=OunjvMVJPipuQwZ_


எஸ்பிபி


https://youtu.be/c6KoQ8eCbKw?si=Hnizb4wglNOCRuz-


“தேனே தென்பாண்டி மீனே”

இங்கே பாசப் பாடல் இதுவும் இரண்டு பரிமாணங்களில் அக்காவும், தம்பியும் அம்மாவுக்கும், மகனுக்காகவும் கொடுத்திருப்பார்கள்.


ஜானகி


https://youtu.be/YqFHrpOEVEk?si=SNIFd6WKpfJCBIPP


எஸ்பிபி


https://youtu.be/eIuB7XiOyuY?si=ZIO9Q1YoYU_Ljbdp


உதயகீதம் கொடுத்த அதே கே.ரங்கராஜின் “நினைவே ஒரு சங்கீதம் தரும்” இருவர் குரலில் தனித் தனியாய்,

“எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் வீணாகத் தான் போகுதே”


ஜானகி


https://youtu.be/ImpesKVIjPQ?si=JXr9byFMqV-Jவ்ச்


எஸ்பிபி


https://youtu.be/qjDPmpcZPU4?si=CeGPHXa5SKI9q1Dc


வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்துநாராணநம்பி நடக்கின்றான்


கேளடி கண்மணி தந்த அந்த ஆண்டாள் பாசுரத்தில் பக்தி என்னும் ஆழியில் இறக்கி விடுவார்கள்.


ஜானகி


https://youtu.be/SFR13To0ZXk?si=Wv_nad73te47GlyV


எஸ்பிபி


https://youtu.be/rv7t0ubd0Zc?si=nGI5kk0U-HOexXNQ


இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பாட்டுக் கூட்டணிகள் தந்த வித்தைகள் தான் எத்தனை எத்தனை.



கானா பிரபா

05.08.2026




No comments:

Post a Comment