Pages

Sunday, June 22, 2025

நடிகர் விஜய்க்காக தாய் மாமன் எஸ்.என்.சுரேந்தர் பாடல்கள்

 


காதலின் வயது

அடி எத்தனை கோடி

அத்தனை வருஷம் 

நாம் வாழணும் வாடி….


பூவே பூவே பெண்பூவே ❤️


விஜய் போலவே தன் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தருக்கும் அதே நாசிக் குரல். அதனாலோ என்னமோ விஜய் இன் ஆரம்பக் குரலில் இருந்து பல்வேறு படங்களில் சுரேந்தர் குரல் அச்சொட்டாக பொருந்தி வந்திருக்கிறது.

இந்த மாதிரியான பொருந்தல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கும் அமைந்திருக்கிறது.

குறிப்பாக

தனிமையிலே ஒரு ராகம்


https://youtu.be/7JcMQuoJ2_k?si=iP2cbLFXq27rM-dm


மற்றும்


நீலகிரிப் பூவே


https://youtu.be/wr5Gq7fqp8c?si=ik_bvmx6zuV1_-PO


ஆகிய பாடல்களில் ஆக்ரோஷ நாயகன் விஜயகாந்துக்கு சுரேந்தர் பாடகக் குரல் இணைந்து சிறப்பித்திருக்கிறது.

அதே காலப்பகுதியில் விஜயகாந்துக்கு சுரேந்தர் பின்னணிக் குரலாளராகவும் இயங்கி இருக்கிறார்.

ஆனால் இதில் இன்னொரு முரண் மோகனுக்கு அச்சொட்டாகப் பின்னணிக் குரலில் பொருந்திப் போன சுரேந்தர் இருக்க பாடல் விஷயத்தில் எஸ்பிபி பொருந்தி விடுவார்.

ஆகவே விஜயகாந்த் & விஜய் இருவரின் முரண் குணாதசியங்களிலும் அழகாக அணி சேர்ந்த குரல் சுரேந்தருடையது.


அந்த வகையில் விஜய்க்காக சுரேந்தர் பாடிய பாடல்கள் வரிசையில்

அவரின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில்

மணிமேகலை இசையில்

அம்மாடி ராணி


https://youtu.be/oQHF_R6sVnc?si=Tww7eZwOz8MlYkok


மாப்பிள்ளை நான்


https://youtu.be/AyvvZnP_noo?si=y1OREdewsJTnrZK5


மற்றும்


மனோஜ் பட்னாகர் இயக்கி இசையமைத்த என்றென்றும் காதல் படத்தின் ஜலக்கு ஜலக்கு


https://youtu.be/df2JnybxqGg?si=2lz2Z6RHawP_Ly4D


தேவா இசையில்

செந்தூர பாண்டி படத்தில்

மானே நானே


https://youtu.be/z1ZmbWmPnwg?si=RTW3DyWHfvfksNWl


ரசிகன் படத்தில் 

சில்லென சில்லென


https://youtu.be/LiJpppL3G_A?si=OVKM1Uae3TiLeede


விஷ்ணு படத்தில்

ஹம்மா ஹம்மா


https://youtu.be/m3SaGlXEXxA?si=fhY8QwmieGGajGI9


ஒன்ஸ்மோர் படத்தில் இன்னொன்றாக

மலர்களே


https://youtu.be/tqXqBN9OSP4?si=KjkuIdTvrgw2wcCW


நெஞ்சினிலே படத்தில்

ப்ரைம் மினிஸ்டர்


https://youtu.be/9w-vkHUa16s?si=3c0U6bb5QN6G5qR4


“ப்ரியமுடன்” படத்தில் ஒயிட்டு லகான் கோழி ஒண்ணு பாடலை இருவரும் பாடி நடித்திருப்பார்கள்


https://youtu.be/zrK-bjXH7jc?si=uxqRuz48r4ac8m1t


என்று தொடர்ந்து விஜய்க்காக அவரின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர் குரலைப் பொருத்தி அழகாக்கினார். பதிவை எழுதியவர் கானா பிரபா


இதே வேளை அருண்மொழி குரலைப் பொருத்திப் பார்த்த விதத்திலும் தேவா,  இளையராஜா பங்களிப்பில்

சிங்காரக் கண்ணுக்கு மை கொண்டு வா (விஷ்ணு) , அம்மன் கோயில் எல்லாமே (ராஜாவின் பார்வையிலே) , அரும்பும் தளிரே (சந்திரலேகா) என்றும் பின்னர் உன்னிமேனன், ஹரிஹரன் என்று நீளும் பாடகர் பட்டியலில் பாட்டுத்தலைவன் எஸ்பிபியும் அணி செய்தார்.

இருப்பினும் ஈராயிரத்துக்கு முந்திய விஜய் படங்களில் சுரேந்தர் குரலின் தனித்துவம் முன் சொன்ன பாடல்களில் அடையாளம் காண்பிக்கும்.


சுரேந்தரின் இயல்பான அந்தக் குழைவு, உணர்ச்சிவசப்பட்டு வரிகளை மேய்ந்து கொடுக்கும் பாங்கு இந்தப் பாடல்களை இன்னொரு இடத்துக்கு உயர்த்தும்.


சமீப காலத்தில் வைரல் ஹிட் என்று சொல்லும் தேவா இசையில் “தேவா” படத்தில்  சித்ராவோடு சுரேந்தர் பாடும்

சின்னப் பையன் சின்னப் பொண்ணை காதலிச்சா பாட்டு வரும்


https://youtu.be/bXozbQ9hOcc?si=2Ayl_QXAp2RPHADI


இவற்றில் எல்லாம் உச்சம்.இந்தப் பாட்டுக்கு சோனி நிறுவனமே சிவப்பு கம்பளம் விரித்து வாங்கிப் போட்டிருக்கிறது.


என் மனக் கிணற்றில் கிடப்பில் இருந்து

சமீபகாலமாக ஒரு பாடல் ஞாபகத்தைக் கிளறி விட்டிருக்கிறது 

மாண்புமிகு மாணவன் தேவா இசையில்

டிசெம்பர் மாதத்துப் பனித் துளியே


இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்காத சூழலிலும் என் மனசு பாடி விடுகிறது. ❤️


கானா பிரபா

22.06.2025

No comments:

Post a Comment