மலையாளத்தின் மகோன்னதமான இசையமைப்பாளர்களில் ஒருவர், நமக்கெல்லாம் “சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி” (யாருக்கு யார் காவல்)
https://youtu.be/4qshfRBf78Y?si=pEu2ZnqGHN0Uvp8f
பாடல் வழியாக அடையாளம் கொடுத்தவர் நேற்று 15.01.2024 இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்.
பெண் என்றால் பெண் படத்துக்காக, 1967 இல் எம்.எம்.விஸ்வ நாதனிடம் முதன் முதலில் வாத்தியக் கலைஞராகப் பணியாற்றியவர்.
அந்த நேரத்தில் மங்கள மூர்த்தி, பென் சுரேந்தர் ஆகியோர் அங்கு அவருக்கு முன் மூத்த வாத்தியக் கலைஞர்களாக இயங்கியுள்ளார்கள்.
அக்கார்டியன் வாத்தியத்தைத் தானே சுயமாகக் கற்ற சுயம்பு இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விவநாதனைத் தன் இசை வழிகாட்டியாகக் கொண்டு 71 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே அவரின் இசைச் சாதனை சொல்லும். கானா பிரபா
அக்கார்டியன் வாத்திய விற்பன்னராக இருந்தவர் 1969 முதல் கீபோர்ட் வாத்தியக் கலைஞராகவும் தன்னை ஆக்கிக் கொண்டார். @கானாபிரபா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் ஏராளம் இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர். முதல் கீபோர்ட்டை வாங்குவதற்காகத் தான் காரை அடகு வைத்து 20,000 ரூபாவுக்கு வாங்கினாராம்.
ஆராரோ ஆராரோ அச்சன்ட மோள் ஆராரோ
https://youtu.be/YMNyFMD9jxk?si=3edyInAHigNlwESC
இவரின் புகழ் பூத்த பாடல்களில் ஒன்று.
கே.ஜே.ஜாய் கொடுத்த பேட்டி
https://youtu.be/lyJbUxmJGFs?si=4Tvgj6i_APTfO7bj
அவரின் இசையில் மிளிர்ந்த பாடல்கள் சில
https://youtu.be/eVzEp1WxBIM?si=If9Fehzcm6GOLP5D
தமிழில் “வெளிச்சம் விளக்கைத் தேடுகிறது”, “அந்தரங்கம் ஊமையானது” உள்ளிட்ட படங்களுல்கும் மேலும் இசை வழங்கியுள்ளார்.
“காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே”
https://youtu.be/_TToXX2JVYw?si=7fLlKWAdVE802Z3X
பாடல் எல்லாம் அந்தக் காலத்து இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைக் கிளப்பி கே.ஜெ.ஜாய் அவர்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு “சிப்பியின் உள்ளே” மற்றும் “காதல் ரதியே” பாடல்கள் அவரின் புகழ் கிரீடத்தை அலங்கரித்த முத்துகள்.
ஆழ்ந்த இரங்கல்கள் கே.ஜே.ஜாய் (K. J. Joy) 🙏
கானா பிரபா
16.01.2024
No comments:
Post a Comment