Pages

Tuesday, September 19, 2023

"என்னுயிர்த் தோழன்" பாபு


கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் அது “என்னுயிர்த் தோழன்” பாபு விஷயத்தில் கடந்த 32 வருட சாட்சியாக இருந்தது.

புகழை உழைக்கக் கொடுத்த அதிக பட்ச விலை அதுதான்.

என்னுயிர் தோழன் திரைப்படம் படமாக்கப்படும் வேளை கல்கியில் தொடராக வெளிவந்தது. பாரதிராஜாவின் எழுத்தில் வந்த இப்படம் இவரது வழக்கமான பாணியில் இருந்து விலகி அரசியல் வாழ்வில் ஒரு சாதாரண தொண்டன் எப்படி ஏமாற்றப்படுகின்றான் என்பதை நடப்பு அரசியலோடு பொருத்தி எடுத்திருந்தார். 

பாபு அப்பட்டமாக “தர்மா” என்ற பாத்திரமாகப் பொருந்தி இருப்பார்.

பாரதிராஜாவின் மனைவி முன்னர் ஒரு பேட்டியில் தன் கணவர் இயக்கிய படங்களிலேயே என்னுயிர் தோழனே பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். பாரதிராஜாவின் உதவி இயக்குனரும், இப்படத்தின் அறிமுக நாயகனுமான பாபு இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளம் படங்களில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். விக்ரமனின் “பெரும் புள்ளி” மற்றும், “தாயம்மா” போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் அவர் டூப் போடாமல். நடித்து விபத்தில் சிக்கி இன்று வரை உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் 32  வருடங்களாகப் படுக்கையில் இருந்தார்.




பாபு குறித்து தன் வாழ்க்கைத் தொடரில் பாரதிராஜா பேசியது

https://youtu.be/y1ndTbAqGxs?si=PLP7EhZM90GYmPCg

இடையில் கொஞ்சக் காலம் உடல் நிலை தேறியது போல இருந்த போது பாரதிராஜா மீண்டும் உதவி இயக்குநராக அணைத்துக் கொண்டார். ஆனால் காற்று ஊதிய பலூன் நிலையாகிப் போனார்.

தன் அண்ணன் பாபுவைக் கவனிப்பதற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த தம்பியும் திடீர் அகால மரணம். தாயின் அரவணைப்பில் பாரதிராஜா போன்ற நேசங்களின் உதவியோடு காலத்தை வலியோடும், வேதனையோடும் கழித்தார். பொன்வண்ணன்  மிக நெருக்கமாகப் பழகியவர் பாபுவின் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுத்தும் பின்னர் வேறு காரணத்தால் வெளியிடவில்லை.

“என்னுயிர்த் தோழன்” பாபு ஆத்மா வலி கடந்து ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

No comments:

Post a Comment