Pages

Friday, September 8, 2017

இசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂


மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான "மண்ணுக்குள் வைரம்" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.

"ஏ சம்பா நாத்து சாரக்காத்து" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.

இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது "இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்" என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் "இதழோடு" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது "மடி மீதூஊஊ" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
"இதழில் கதை எழுதும் நேரமிது" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே "இதழோடு இதழ் சேரும்" என்று.

திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது "முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
"முத்து சிரித்தது முல்லை வெடித்தது" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 "ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே" என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..

"பொங்கியதே காதல் வெள்ளம்" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். "சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது"
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.

பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக "கிழக்கு வெளுத்திருச்சு" பாடல் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.

தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்

இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts

முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o

பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ

கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys

ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o

ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc

கானா பிரபா
08.09.17

#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன் 
இசைப் பயணம் - மண்ணுக்குள் வைரம் 🌴🍂

மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும்? அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது. 
எண்பதுகளில் கொடி கட்டிப் பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ இருவருக்கும் விரிசல். கோவைத் தம்பி வட நாடு போய் இரட்டை இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் ஐ அழைத்து வந்தும் படம் பண்ணிப் பார்த்தார். பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு படங்கள் தேறவில்லை. 
 
இன்னொரு பக்கம் முதல் மரியாதை பட வெற்றிக்குப் பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறப்பான வேடங்கள் என்று சொல்லக் கூடிய படங்களும் வந்து கிட்டின. 
இயக்குநர் பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் தன்னுடைய அறிமுகப் படமான "மண்ணுக்குள் வைரம்" படத்தை இயக்க, கோவைத் தம்பி தயாரிக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், முரளி, சுஜாதா, ராஜேஷ், ரஞ்சனி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே அணி வகுத்தது.
வண்ண வண்ணப் பூக்கள் புகழ் விநோதினியை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகப் பார்க்கலாம். "பாராமல் பார்த்த நெஞ்சம்" பாட்டு அழகி வாணி விஸ்வநாத் இற்கு இது அறிமுகப் படம் 
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அட இந்தப் படத்தை இயக்கிய மனோஜ்குமாரா பின்னாளில் மருதுபாண்டி, வெள்ளையத் தேவன், மறவன் என்றெல்லாம் பாளைக் கத்தியைச் செருகி ரத்தம் பீறிட வைத்தவர் என்று ஆச்சரியப்படுவார்கள். மண்ணுக்குள் வைரம் படம் பெரிய வெற்றியைக் கொடுக்காவிட்டாலும் பரவலான கவனிப்பை ஈர்த்தது.

"ஏ சம்பா நாத்து சாரக்காத்து" https://youtu.be/XZNWwQG9UWQ என்று எப்படி ஒரு தெம்மாங்கு இசையையும் "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு" என்று மேற்கத்தேயம் தழுவிய இசையையும் கலந்து கட்டி எப்படித் தொண்ணூறுகளில் இசையமைப்பாளர் செளந்தர்யன் களம் இறங்கினாரோ அது போலவொரு வாய்ப்பு மண்ணுக்குள் வைரம் வழியான அறிமுகத்தில் இசையமைப்பாளர் தேவேந்திரனுக்குக் கிட்டியது. தேவேந்திரன் எப்படித் திரையுலகுக்கு வந்தார் என்பதைப் பின்னுள்ள பகுதி ஒன்றில் பார்ப்போம்.

இசையமைப்பாளர் தேவேந்திரன் பற்றி ஒரு தொடர் எழுதுகிறேன் என்று நண்பர் ஒருவருக்குச் சொன்ன போது "இதழோடு இதழ் சேரும் நேரம் இன்பங்கள் ஆறாக ஓடும்" என்று பாட ஆரம்பித்து விட்டார்.
எவ்வளவு அற்புதமான பாட்டு இது. திரையிசை இலக்கணம் படித்த, ஒரு துறை தேர்ந்த இசையமைப்பாளர் கொடுக்கக் கூடிய அத்தனை லட்சணங்களும் பொருந்திய பாட்டு இதுவல்லவா?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டில் தான் எவ்வளவு அந்நியோன்யம் சொட்டுகிறது இந்தப் பாட்டில். அதுவும் "இதழோடு" என்று இடை வரியில் கிசுகிசுப்பாகக் காதலி காதில் மட்டும் விழுமாற் போல எஸ்.பி.பி ஒரு சங்கதி கொடுப்பார் பாருங்கள் அப்பப்பா. ஒரு திரையிசைப் பாடலாக இருந்தாலும் ஒவ்வொரு வரிகளையும் நீட்டி நிரவிச் சாதகம் பண்ணிக் கொடுப்பார்கள் இந்தப் பாட்டு ஜோடி. முடிக்கும் போது "மடி மீதூஊஊ" என்று எஸ்.பி.பி குரல் சாய்ந்து கொடுக்கும் சுகமே தனி.
பாரதிராஜாவின் பள்ளியில் இருந்து வந்த மனோஜ்குமார் சொல்லிச் செய்ததோ என்னமோ பாரதிராஜா படங்களில் வரும் அந்த முத்திரைக் கைதட்டலோடு தான் இந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.
"இதழில் கதை எழுதும் நேரமிது" என்று இளையராஜாவுக்கு எழுதிய முத்துலிங்கம் இங்கே "இதழோடு இதழ் சேரும்" என்று.

திரையிசைப் பாடல் ஒன்றை மாமூலாக, வழக்கமான சங்கதிப் பிரகாரம் உருவாக்கும் நடைமுறை தாண்டி, அதன் மெட்டில் ஜாலம் காட்டிய புதுமை தரும் பாடல்களில் தவிர்க்க முடியாதது "முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே
மலைத் தேனே" பாடல். பூப்பெய்தும் பெண்ணைக் கொண்டாடும் தோழியர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் காதலர் கூடிக் குலாவுதல் என இரண்டு பரிமாணங்கள் கொண்ட பாட்டு இது. பாட்டு முழுக்கச் சதிராட்டம் போடும் மெட்டு. 
"முத்து சிரித்தது முல்லை வெடித்தது" என்று தோழிமார் பாடும் பாடல் சடுதியாக
 "ஒரு சந்தோஷம் ஊஞ்சலாடக் கண்டேனே
புதுச் சங்கீதம் நானும் பாட வந்தேனே" என மாறும்.
ஒரே சீராக இல்லாது முரணாகவும் நேராகவும் பயணிக்கும் இம்மாதிரியான ஒரு சவால் நிறைந்த பாட்டை எடுத்த எடுப்பிலேயே தன் முதல் படத்தில் கொடுக்க எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் தேவேந்திரனுக்கு..

"பொங்கியதே காதல் வெள்ளம்" ஆரம்பம் முதல் முடிவு வரை கிராமத்து வயலில் நீர் இறைக்கும் இயந்திரம் வழியே  குபுக் குபுக்கெனப் பாயும் நீரைப் போன்றதொரு பிரவாகம். தேவேந்திரன் என்று அறியாது விட்டால் இதை டி.ராஜேந்தரின் இசைக் கணக்கில் போடுமளவுக்கு ஒற்றுமை இருக்கும். "சொல்லாமல் தானே இந்த மனசு தவிக்குது"
பாட்டையும் கேட்டால் என்னவென்று மனசு சொல்லும்.
பாடலின் தாளக் கட்டு மிருதங்க ஜதியிலிருந்து அப்படியே விலகாது ஒவ்வொரு வாத்தியங்களின் கைப் பிடிக்கும் அழகைத் தனியே ரசிக்க வேண்டும்.

பாரதிராஜாவின் படங்களில் சம்பிரதாயமாக அமைந்து விடும் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் பாடகர் மலேசியா வாசுதேவனையும் தன்னுடைய படத்தின் முகப்புப் பாடலோடு சேர்க்க வேண்டுமென இயக்குநர் மனோஜ்குமார் கங்கணம் கட்டியிருக்கக் கூடும். அதனால் ஒரு அழகிய கிராமியத்துப் பண் பாடும் பாட்டாக "கிழக்கு வெளுத்திருச்சு" பாடல் அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து பாடல்கள் இயற்றப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன.

தேவேந்திரன் இசையில் மண்ணுக்குள் வைரம் பாடல்கள்

இதழோடு இதழ் சேரும் நேரம் 
https://youtu.be/fu6Y3uqwlts

முத்து சிரித்தது
https://youtu.be/qoqC8_UNk0o

பொங்கியதே காதல் வெள்ளம்
https://youtu.be/UzLJVdNeMUQ

கிழக்கு வெளுத்திருச்சு
https://youtu.be/CyIEch5p4ys

ஜாதி மல்லிகையே
https://youtu.be/VIFF3QFAv0o

ஆத்தா மாரியாத்தா
https://youtu.be/VU83xs5wGdc

கானா பிரபா
08.09.17

#தமிழ்த்திரைஅரசர்கள் #தேவேந்திரன்

No comments:

Post a Comment