Pages

Wednesday, August 3, 2016

ஆடிப்பெருக்கே வா வா வா

🌷🙏 அன்னையின் அருளே வா வா வா 🙏🌷
🍁🍁🍁ஆடிப்பெருக்கே வா வா வா 🍁🍁🍁

அன்னையின் அருளே வா வா வா
ஆடிப்பெருக்கே வா வா வா

பொன்னிப் புனலே வா வா வா
பொங்கும் பாலே வா வா வா
அன்னையின் அருளே வா வா வா

குடகில் ஊற்று கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து
அன்னையின் அருளே வா வா வா

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
தேனாய்ப் பெருகும் தமிழே வா
திருமால் தனைக்கே மாலையாகி
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 
அன்னையின் அருளே வா வா வா

கட்டிக்கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை நயமும் நீ
முத்துத்தாண்டவர் பாடலிலே
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
வற்றாக் கருணைக் காவேரி
வள நாடாக்கும் தாயே நீ
வாழிய வாழிய பல்லாண்டு

https://www.youtube.com/shared?ci=fsuj4DHNxxo

பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர் : டாக்டர் சீர்காழி எம்.கோவிந்தராஜன்
இசை : ஏ.எம்.ராஜா
படம்: ஆடிப் பெருக்கு


No comments:

Post a Comment