Pages

Monday, November 11, 2013

வாத்திய விற்பன்னர் அனில் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் ஒரு வானொலிச் சந்திப்பு

அனில் ஶ்ரீநிவாசன் அவர்கள் இசையுலகில் நன்கு அறியப்பட்ட கலைஞர், இளவயது என்றாலும் அவரின் வயதை நிரப்பும் இசை அனுபவம் நிரம்பப் பெற்றவர்.  மேற்கத்தேய பியானோ வாசிப்பில் மூன்று வயதில் பயில ஆரம்பித்த இவர் தொல்லிசைக் கலைஞர்களது மேடை இசை நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி திரை சார்ந்த வெளிப்பாடுகளிலும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பதற்கு உதாரணமாக, இசைஞானி இளையராஜாவின் How to name it என்ற மேடை நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளாராகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் மூல வாத்தியக்காரராகவும் இயங்கிய அவரது சமீபத்தில் அவரது பங்களிப்புகளில் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியவை. மேடை வாசிப்புகள் தவிர, தன்னுடைய இசைப்பகிர்வுகளை  சிக்கில் குருசரண், மேண்டலின் யூ.ஶ்ரீ நிவாஸ், மேண்டலின் யூ.ராஜேஷ் உள்ளிட்ட ஆளுமைகளோடு  இசைவட்டுகள் வழியாக வெளிக்கொணர்ந்தவர்.

ஒரு இசைக்கலைஞர் என்ற வட்டத்தை மீறி, அடுத்த தலைமுறையினருக்குத் தான் கற்ற சங்கீதம் முறையாகச் சென்று சேரவேண்டும் என்ற முனைப்போடு இப்போது பல இசைப்பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரோடு கைகோர்த்து இந்தப் பணிக்காகத் தன் ஆதரவை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் தொடர்பும், அவரைப் பேட்டி எடுக்கவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அவரும் நம்மைப் போலவே இசைஞானி இளையராஜாவின் இசை குறித்துத் தீரா வேட்கை கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜா வழங்கிய இசையின் தாற்பர்யத்தைச் சொல்லி வருபவர், தன் பியானோவிலும் செய்து காட்டியவர். அந்த வகையில் மெல்பனுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கலை நிகழ்வுக்காக வருகை தந்த இவரை நண்பர் காமேஷ் அவர்களின் தொடர்பின் வழி ஒரு வானொலிப் பேட்டியை எடுக்க முடிந்தது. பேட்டி எடுக்கப்போகிறோம் என்பதையே ஒரு இருபது நிமிட அவகாசத்தில் அவருக்குத் தெரியப்படுத்தி எந்த வித முன்னேற்பாடுமின்றி அவரைப் பேச அழைத்தபோது மடை திறந்தது போலத் தன் இசையுலக அனுபவங்களில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையின் மகத்துவம் எவ்வளவு தூரம் அடுத்த தலைமுறையைச் சென்றடையவேண்டும் போன்ற மனவெளிப்பாடுகளையும் தன் இருபது நிமிடங்கள் கடந்த பேட்டியில் சொல்கிறார். கேட்டு ரசியுங்கள்.
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

இவர் வழங்கியிருந்த  Rythms Roses & Raja என்ற இசைப் பகிர்வின் சில துளிகள்



 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் பிரத்தியோகத் தளம்

http://anilsrinivasan.com/

 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் காணொளிப்பக்கம்

http://www.youtube.com/user/TheMadrasPianist

1 comment:

  1. அற்ப்தம். வேலூரில் மல்டிமீடியா பிரிவில் கெஸ்ட் லெக்சரகா இருக்கும் எனது மகன் கிஷோர் குமாருக்கு பிடித்த கலைஞர். அவருக்கும் தொடர்பு கொடுத்துள்ளேன் பிரபா சார். நன்றி.

    ReplyDelete