Pages

Friday, June 11, 2010

றேடியோஸ்புதிர் 56: தமிழில் வந்த அதே தலைப்பு தெலுங்கில்; ஆனால் வேறு வேறு

பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்து தமிழில் வந்த ஒரு படத்தின் அதே படத்தலைப்புடன் சில வருஷங்களுக்குப் தெலுங்கில் வந்த இந்தப் படம் இத்தனை புகழை அள்ளிக் குவிக்கும் என்று ராஜாவே அந்த நேரம் எண்ணியிருப்பாரோ தெரியவில்லை. ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளோடு தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் புகழப்பட்ட இந்தப் படத்தை வாரியணைத்துப் போற்றிப் புகழத் தமிழ் ரசிகர்களும் தவறவில்லை. இன்று எத்தனை பேருக்கு இந்தப் படம் ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியுமே என்னமோ அவ்வளவுக்கு திகட்டாத அவலாக இருக்கும் பாடல்கள் எல்லோருக்குமே ப்ரியமானவை.

இந்தப் படத்தின் இயக்குனருக்கும் சரி , இசைஞானி இளையராஜாவுக்கும் சரி குறித்த இந்தப் படம் இவர்கள் வாழ்வில் ஒரு மைல்கல். திருட்டில் அப்படி என்ன ஆசையோ தெரியவில்லை இயக்குனருக்கு இன்னொரு படத்துக்கும் திருட்டைத் தலைப்பாக்கினார். ஆனால் உழைப்போ நேர்மையாக இருந்தது இந்தப் படத்தில். பின்னணி இசையைக் கேட்டால் இதயத்தை உருக்கும்.

ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?

சரி சரி இதுக்கு மேலே சொன்னால் விடையை என்னிடமே கேட்பீர்கள் பின்னணி இசையைக் கேட்டவாறே படம் என்ன என்ற பதிலோடு பட்டையைக் கிளப்புங்கள், ராவணாவுக்கு முதல் பின்னணி இசை தருவேன் பாடல்களோடு கலந்துமக்கு ;)

சரியான பதில்

தெலுங்கில்: கீதாஞ்சலி

தமிழில்: இதயத்தைத் திருடாதே

இயக்கம்: மணிரத்னம்

போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

39 comments:

  1. தெலுங்கு-கீதாஞ்சலி தமிழ்-இதயத்தைத்
    திருடாதே.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ரவிஷங்கர், நீங்க தான் முதல் ஆளும் கூட ;)

    ReplyDelete
  3. Geeethavum anjaliyum

    ReplyDelete
  4. நிஜம்ஸ்

    :) அதே தான்

    அனானி நண்பரே

    ஒரு படம் தானே கேட்டேன் ;)

    ReplyDelete
  5. இதயத்தைத் திருடாதே

    ReplyDelete
  6. Sir,

    Idayathai Thirudathe..

    Maestro's world-class music + BGM,
    uncomparable PC Sriram's mindblowing photography.

    Sudharsan

    ReplyDelete
  7. இதயத்தைத் திருடாதே..!

    ReplyDelete
  8. இதயத்தைத் திருடாதே

    ReplyDelete
  9. வந்தியத்தேவரே

    அதே தான் ;)

    சுட்டி

    நீங்கள் சொன்னது அனைத்துமே உண்மை, விடை உட்பட

    ReplyDelete
  10. thulli ezhunthathu paattu
    chinna kuyilisa kettu
    :)

    ReplyDelete
  11. Thalaivaa neenga ennoda idhayatha thiruditeenga.. australlia police-la complaint kudukanum .. enna procedure?

    ReplyDelete
  12. Geethanu orutharu Anjali selutha vanthanga paavam

    ReplyDelete
  13. சின்னப்பயல், ரிஷான்

    சரியான பதில் தான்

    தமிழில் வந்த முந்திய படத்தின் பாடல்களைத் தந்த நண்பரே படம் என்னவென்று சொல்லணுமே

    ReplyDelete
  14. ஆளவந்தான்

    மிகவும் இலகுவான கேள்வி ஆச்சே

    லோகேஷ்

    சரியான பதில் தான்

    ReplyDelete
  15. கீதாஞ்சலி - தமிழில் இதயத்தை திருடாதே. தமிழ் பதிப்பின் போது SPB வெளிநாட்டு பயணம் சென்றுவிட்டதால் தலைவர் மனோவை எல்லாப் பாடல்களையும் பாட வைத்தார் என்று படம் ரிலிஸ் ஆன போது பத்திரிகையில் படித்த ஞாபகம்.

    ReplyDelete
  16. தமிழில் எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக ........பிடித்த படம் இதயத்தை திருடாதே

    ReplyDelete
  17. பாவலர் கிரியேஷன்ஸ் படம் (தமிழ்) - கீதாஞ்சலி
    தெலுங்குப் படம் - அதுவும் ‘கீதாஞ்சலி’
    அதன் தமிழ் வெர்ஷன் - இதயத்தைத் திருடாதே
    இயக்குனர் - மணிரத்னம்
    அவருடைய இன்னொரு ‘திருட்டு’ டைட்டில் - திருடா, திருடா

    ;)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  18. இதயத்தை திருடாதே

    ReplyDelete
  19. தல...இதயத்தை திருடாதே...;)))

    ரொம்ப ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈசியாக இருக்கு உங்க கேள்வி ;))

    ReplyDelete
  20. Enakku Geetha Anjalinu 2 girl friends irukkanga thale..

    ReplyDelete
  21. அத்திரி

    :) பின்னீட்டிங்

    மீனாட்சி சுந்தரம்

    சரியான பதிலோடு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  22. 56 எனக்கு ராசியில்லாத எண் :)

    ReplyDelete
  23. இதயத்தை திருடாதே,.. கீதாஞ்சலி?

    ReplyDelete
  24. //திருட்டைத் தலைப்பாக்கினார். ஆனால் உழைப்போ நேர்மையாக இருந்தது இந்தப் படத்தில். பின்னணி இசையைக் கேட்டால் இதயத்தை உருக்கும். //
    .......தெலுங்கு கீதாஞ்சலி

    ReplyDelete
  25. சொக்கரே

    அதே தான்

    ஆயில்ஸ்

    சரியான விடை

    தல கோபி

    உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே


    இளா

    முதலில் தெரியாதது பின்னர் தெரிந்தோ ;)

    கலைக்கோவரே

    நீங்கள் பதில் எடுக்கும் பாணியே தனி தான்

    ReplyDelete
  26. geethanjali in Telugu movie.

    Ithayaththaith thirudathey is in Tamil.

    IR has used different singers for the same song in different languages. But in this scenario, I guess IR wanted to promote Mano.

    ReplyDelete
  27. idayathai thirudathey...

    Geethanjali

    SPB versionthaan super-a irukum.

    ReplyDelete
  28. கானா சார், இதயத்தைத் திருடாதே தானே?

    ReplyDelete
  29. வாங்க ராகவன்

    சரியான பதிலோடு நீங்கள் சொன்ன விஷயம் சரியாகத் தான் படுகிறது.

    தங்ஸ்

    கலக்கல்ஸ்


    சுப்பராமன்

    அதே தான் ;)

    ReplyDelete
  30. தெலுங்கில் கலக்கிய படம் = கீதாஞ்சலி
    தமிழில் அதனிலும் கலக்கிய படம் = இதயத்தைத் திருடாதே

    இசை என்பதற்கான ரசனை இருக்கும் வரை, இந்தப் படப் பாடல்கள் தொடர்ந்து ரசிக்கப்படும்! பாடல்களை விட பின்னணி இசை இன்னும் அருமை!

    இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்பு றேடியோஸ்பதியில் கொடுத்து இருக்கீங்களா என்ன காபி அண்ணாச்சி?
    ஜகட ஜகட ஜகடம் = விடிய விடிய நடனம் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

    ReplyDelete
  31. //ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?//

    அதானே! ஒரு வேளை ஓம் நமஹ பாட்டை மட்டும் ஜானகி பாடினாங்க, மத்ததெல்லாம் சித்ரா...அதுனாலயோ? இருக்காதே! தமிழிலும் அப்படியே தானே இருவரும் பாடினாங்க!

    இப்படிப் பாடிப் பாடித் தான், மனோ = கார்பன் காப்பி ஆஃப் எஸ்.பி.பி-ன்னு பேரு வாங்கிட்டாரு!
    நல்ல வேளை, முக்காலா முக்காபலா பாட்டு வந்து அதையெல்லாம் மாத்திக் காட்டுச்சி! ரஹ்மான் மனோவுக்கு செஞ்ச மாபெரும் உதவி!

    ReplyDelete
  32. தல
    இப்போ தான் ஒரு புதிர் போட்டிக்கு முன்னாடியே வரேன்.
    இதயத்தை திருடாதே தானே?:)

    ReplyDelete
  33. தெலுங்குவில் கீதாஞ்சலி

    ReplyDelete
  34. வணக்கம் ஆளவந்தான்

    மன்னிக்கவும் தவறுதலாக உங்கள் பின்னூட்டங்கள் அழிபட்டு விட்டன, பதிலை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கல போல

    கே.ஆர்.எஸ் சுவாமிகளே ;)

    அதே தான், மனோ என்றால் உங்களுக்கு அடுக்காது போல ;)


    கீதப்பிரியன்

    சரியான பதில்கள் இரண்டுமே

    ReplyDelete
  35. சரியான பதில்

    தெலுங்கில்: கீதாஞ்சலி

    தமிழில்: இதயத்தைத் திருடாதே

    இயக்கம்: மணிரத்னம்

    போட்டியில் பங்குபற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  36. //ராஜாவைச் சந்தித்தால் கேட்கவேண்டும் என்று ஒரு கேள்வி, தெலுங்கில் அவ்வளவு அழகாகப் பாடிய எஸ்.பி.பி ஐ ஒதுக்கி தமிழில் மனோவை ஒத்தியதன் காரணம் என்னவோ?//

    In the movie "Indran-Chandran", SPB dubbed for the old Kamal in a really bass and cracked voice(as the character required him to)... because of that SPB's throat got affected and he was not in a condition to sing for 3 months... Mani Ratnam/IR had to record the songs for Idhayathai Thirudadhe(Tamil) during that time and hence they had to use Mano instead of SPB.

    ReplyDelete
  37. தகவலுக்கு நன்றி நண்பரே நீங்கள் சொன்ன விஷயம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது ஞாபகத்துக்கு வருகின்றது

    ReplyDelete