
விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.
இந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே "அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது" என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.
கேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது? அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
போட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.
1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
3. கண்மணி நில்லு காரணம் சொல்லு
சரியான பதில்:
கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
ReplyDeleteதல இதுவா!!???
மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
ReplyDeleteஹிஹிஹி
கண்மணி நில்லு காரணம் சொல்லு..:)
ReplyDeleteமாமரத்து பூவெடுத்தா??
ReplyDeleteதெரியல பாஸ் ஒருவேளை தோல்வி நிலையென நினைத்தாலா இருக்குமோன்னு நினைச்சேன் அது இல்ல போல அப்பன்னா ராத்திரி நேரத்து பூஜையிலா இருக்குமோ டிரெண்ட் அப்ப இந்த மாதிரி எதாச்சும் ஒரு கிளுகிளுப்பான பாட்டு போட்டா படம் போகும்ன்னு நினைச்சிருப்பாங்களோ - சேர்த்திருப்பாங்களோ?
ReplyDeleteகண்மணி நில்லு காரணம் சொல்லு..
ReplyDeleteஆயில்ஸ்
ReplyDelete3 பாட்டு கொடுத்தா இல்லாத பாட்டை சொல்றீரே
தல கோபி
விடை தப்பு
முத்துலெட்சுமி
தப்பே தான் ;)
தமிழ்ப்பிரியன்
ReplyDeleteஇரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்
சுந்தரி
இதுவரை வந்தவர்களில் நீங்கள் மட்டுமே சரியான பதில் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
//கண்மணி நில்லு காரணம் சொல்லு/
ReplyDeleteஇதுதான் பாஸ் :)
குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
ReplyDeleteகூத்துப் பார்த்த இடத்துலதான் நிச்சயமாச்சு!
அண்ணா சாரி,சாரி.
ReplyDeleteஏதோ ஞாபகத்தில் முதல்பாட்டை சொல்லிட்டேன்...
கண்மணி நில்லு காரணம் சொல்லுதான் பிறகு இடம்பெற்ற பாடல்.
ஆயில்ஸ் & எம்.எம்.அப்துல்லா
ReplyDeleteஇரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்
//இரண்டு பதில்கள் சொன்னதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்//
ReplyDeleteஇப்படியே வர்றவங்களை ஆட்டத்துலேர்ந்து நீக்கிட்டே இருந்தா அப்புறம் தனியாத்தான் ஆடணும் பாஸ் கீப் இட் இன் ஞாபகத்துல :))))))))))))
kanmani nillu paatuthaan...
ReplyDeleteVidai sariya???
Tholvi nilaiyena ninaithal paata konja naal thada pannirunthaanga aprom vittutaanga :)
~Kalaimariba
Kalaimariba
ReplyDeleteஉங்கள் பதில் சரியானது, வாழ்த்துக்கள்,
தல இதுவா?
ReplyDeleteகுடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
கைப்புள்ள
ReplyDeleteபாட்டு தப்பு ;)
கண்மணி நில்லு காரணம் சொல்லு :-)
ReplyDeleteஹி..,ஹி..,
ReplyDeleteஒரு ஊகம் :)
ReplyDelete2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பதில் தெர்லேங்கோ
ReplyDeleteரிஷான்
ReplyDeleteஅதான் பதில்
சுரேஷ்
சிரிக்கப்படாது பதில் சொல்லணும் ;)
ஆளவந்தான்
அதான் 3 கொடுத்தேனே அதில் ஒன்றை சொல்லியிருக்கலாமே
சுப்பராமன்
அந்தப் பதில் தவறு
//
ReplyDelete1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு
//
இது தானோ :)
கண்மணி நில்லு காரணம் சொல்லு பாட்டுத்தான்..
ReplyDelete(இன்னமும் சில பழைய்ய வீடியோ கேசட்டுகள்ல இந்தப் பாட்டு மாத்திரம் பதியப்பட்டிருக்காது! என்னுடைய டிவிடியிலும் இந்தப் பாட்டு இல்லை) :(
சென்ஷி மாப்பி
ReplyDeleteசரியான பதில் தான்
சரியான பதில்:
ReplyDeleteகண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
தல நான் இனி சீக்கிரம் வரபார்க்கிறேன்.எப்போவும் பதில் சொல்லும் முன்னரே புதிர் விடுபடுகிறது,
ReplyDelete