Pages

Saturday, November 30, 2013

A Gun & A Ring ஈழத்துப் புலம்பெயர் சினிமா இவ்வார இறுதியில் சிட்னியில்

ஈழத்துப் படைப்பாளிகளின் பேர் சொல்லும் படைப்பாக வெளிவந்து உலக அரங்கில் ஷங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்பட விழாக்களில் போட்டித் திரையிடலிலும் அங்கீகரிக்கப்பட்ட பெருமையோடு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது A Gun & A Ring திரைப்படம்.
போர் தின்ற ஈழத்தின் வடுக்களைக் கதைகளாக இணைத்து, திரைக்கதையிலும் தொழில் நுட்பத்திலும் வெகு சிறப்பான படைப்பாக வந்திருக்கும் இப்படைப்பு ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு சிட்னி வாழ் தமிழர்களை நாடி விசேட காட்சிகளாக இவ்வார இறுதியில் Reading Cinema Auburn இல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கும் சிறப்புச் சலுகை விலை 15 டாலருக்கு காண்பிக்கப்படவிருக்கிறது. இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம்மவரின் படைப்பை நீங்கள் அங்கீகரிக்க வேண்டுகிறேன்.

A Gun & A Ring திரைப்படம்
குறித்து நான் பகிர்ந்திருந்த இடுகை
http://www.madathuvaasal.com/2013/11/a-gun-and-ring_17.html
A Gun & A Ring படத்தின் இயக்குனர் திரு லெனின் எம்.சிவம் அவர்களுடனான சிறப்பு வானொலிப்பேட்டி ஒன்றை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்தேன். இதில் தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்கின்றார், ஒலி வடிவில் கேட்க
value="http://www.radio.kanapraba.com/player.swf">

இந்தப் படம் குறித்த உருவாகப் பணிகளில் இருந்து சர்வதேச அங்கீகரங்கள் வரையான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்த திரு. கந்தசாமி கங்காதரன் அவர்கள். அதைக் கேட்க
http://youtu.be/pfD08BTLITs

இத் திரையிடலுக்கு சிட்னி வாழ் உறவுகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.

Thursday, November 21, 2013

தேனிசைத் தென்றல் தேவா கொடுத்ததில் "பிடித்த" நூறு

நான் முன்னர் பகிர்ந்திருந்த பகிர்வில் சொன்னது போல "கிராமங்களில் இன்னமும் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது" என்பதற்கமைய, இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை. பட்டியலைத் தயாரித்துவிட்டு ஒருமுறை இணையத்தில் கிடைக்கும் தேவாவின் படங்களின் பட்டியலை மேய்ந்து பார்த்தால் சிற்பியிலிருந்து பரத்வாஜ் வரை இசையமைத்த படங்களை அண்ணனுக்கே தாரை வார்த்திருந்தார்கள். ஆகவே இங்கே நான் பகிரும் பட்டியல் ஓரளவு தெளிவைத் தருமென நினைக்கிறேன். தேவா இசையில் மலர்ந்த பாடல் தொகுப்புகள் இன்னும் ரக வாரியாக அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

பாடல்களின் பட்டியலுக்குப் போவதற்கு முன்னர்
1. தேவாவின் பாடல்களைப் பிடிக்காதவர்கள் இந்த வரியோடு ப்ரெளசரை மூடி விடவும்

2. இது என் இரண்டு நாள் உழைப்பு என்பதால் மீளப்பகிர்பவர்கள் இப்பகிர்வின் சுட்டியோடு கொடுக்கவும். ஏனெனில் ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடமே என் பதிவை வாசிக்க அனுப்பியிருந்தார் அவ்வ்

3. Last but not least இந்தப் பாடல்களை எங்கே டவுண்லோடு பண்ணலாம், சுட்டி தருவீர்களா என்ற மேலதிக விசாரணைகள் தவிர்க்கப்படுகின்றன :-) 

1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
2. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம்
3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை
4. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு
5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு - சோலையம்மா
6. கொஞ்ச நாள் பொறு தலைவா - ஆசை
7. அவள் வருவாளா - நேருக்கு நேர்
8. முதல் முதலில் பார்த்தேன் - ஆஹா
9. ஓ சோனா ஓ சோனா - வாலி
10. மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி
11. ஏ ஹே கீச்சுக்கிளியே - முகவரி
12. உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி
13. தாஜ்மகாலே - பெரியதம்பி
14. தங்கமகன் இன்று - பாட்ஷா
15. நகுமோ - அருணாசலம்
16. ஒரு பெண்புறா - அண்ணாமலை
17. நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை
18. தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம்
19. சின்னச் சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள்
20. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா
21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை
22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே - கல்லூரி வாசல்
23. ஒத்தையடிப்பாதையிலே - ஆத்தா உன் கோயிலிலே
24. முத்து நகையே முழு நிலவே - சாமுண்டி
25. பதினெட்டு வயது - சூரியன்
26. ராசி தான் கை ராசி தான் - என் ஆசை மச்சான்
27. ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா - உனக்காகப் பிறந்தேன்
28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர்
29. மகராணி மகராணி மாளிகை மகராணி - ராஜபாண்டி
30. கருடா கருடா - நட்புக்காக
31. மஞ்சள் நிலாவின் ஒளியில் - திருமூர்த்தி
32. நீ இருந்தால் நான் இருப்பேன் - ஆசையில் ஓர் கடிதம்
33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க
34. வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன் 
35. நந்தினி நந்தினி ஓ நந்தினி - அம்மா வந்தாச்சு
36. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை
37. செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே
38. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள்
39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து - பொற்காலம்
40. காதலி காதலி - அவ்வை சண்முகி
41. முதன்முதலாக - எங்கள் அண்ணா
42. கோகுலத்து கண்ணா கண்ணா - கோகுலத்தில் சீதை
43. இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை
44. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி
45. மலரோடு பிறந்தவளா - இனியவளே
46. இந்த நிமிஷம் - ஹலோ
47. நில்லடி என்றது - காலமெல்லாம் காத்திருப்பேன்
48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு
49. செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன்
50. சொல்லவா சொல்லவா - மகா பிரபு
51. ஆறெங்கும் தானுறங்க - மனசுக்கேத்த மகராசா
52. உன் பேர் சொல்ல ஆசை தான் - மின்சாரக் கண்ணா
53. மனசே மனசே - நெஞ்சினிலே
54. வண்ண நிலவே வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
55. ஓ வெண்ணிலா - நினைவிருக்கும் வரை
56. பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன்
57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி - ரெட்டை ஜடை வயசு
58. பெண் கிளியே பெண் கிளியே - சந்தித்த வேளை
59. வணக்கம் வணக்கம் - சீனு
60. செந்தூர பாண்டிக்கொரு - செந்தூர பாண்டி
61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
62. பார்த்தேன் சிரித்தேன் - சாமி சொன்னா சரிதான்
63. மன்னவனே மன்னவனே - கோட்டை வாசல்
64. போதும் எடுத்த ஜென்மமே - புள்ளகுட்டிக்காரன்
65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே - தூது போ செல்லக்கிளியே
66. யேன் அ ஸாரே - கங்கைக்கரைப் பாட்டு
67. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க்
68. மஞ்சனத்துப் பூவே - நம ஊரு பூவாத்தா
69. சிந்தாமணிக் குயிலே - மண்ணுக்கேத்த மைந்தன்
70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி
71. தூதுவளை இலை அரைச்சு - தாய் மனசு
72. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே
73. வந்தாளப்பா வந்தாளப்பா - சீதனம்
74. பிரிவெல்லாம் பிரிவில்லை - சூரி
75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு
76. உலகத்திலுள்ள அதிசயங்கள் - தை பொறந்தாச்சு
77. மும்பை காற்றே மும்பை காற்றே - காதலி
78. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான்
79. நாளை காலை நேரில் வருவாளா - உன்னைத் தேடி
80. வெளிநாட்டுக் காற்று தமிழ் - வானவில்
81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச - வெற்றிக் கொடி கட்டு
82. ஒரு நாளும் உனை மறவாத - வான்மதி
83. இடம் தருவாயா - அப்பு
84. பொருள் தேடும் பூமியில் - கல்கி
85. ஜனவரி நிலவே நலந்தானா - என் உயிர் நீதானே
86. எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகில் நான் இருந்தால்
87. வந்தேன் வந்தேன் - பஞ்ச தந்திரம்
88. அழகே பிரம்மனிடம் - தேவதையை கண்டேன்
89. சகல கலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம்
90. ஜூலை மலர்களே - பகவதி
91. கம்மா கரையிலே - வேடன்
92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம்
93. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே
94. குயில் குக்கு கூ - வாய்மையே வெல்லும்
95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன்
96. ஏலேலங்குயிலே - புது மனிதன்
97. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா
98. ஏ ஞானம் யெப்பா ஞானம் - இந்து
99. தேன் தூவும் வசந்தம் - வைதேகி கல்யாணம்
100. தூக்கணாங்குருவி ரெண்டு - ஜல்லிக்கட்டுக்காளை

Monday, November 11, 2013

வாத்திய விற்பன்னர் அனில் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் ஒரு வானொலிச் சந்திப்பு

அனில் ஶ்ரீநிவாசன் அவர்கள் இசையுலகில் நன்கு அறியப்பட்ட கலைஞர், இளவயது என்றாலும் அவரின் வயதை நிரப்பும் இசை அனுபவம் நிரம்பப் பெற்றவர்.  மேற்கத்தேய பியானோ வாசிப்பில் மூன்று வயதில் பயில ஆரம்பித்த இவர் தொல்லிசைக் கலைஞர்களது மேடை இசை நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி திரை சார்ந்த வெளிப்பாடுகளிலும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பதற்கு உதாரணமாக, இசைஞானி இளையராஜாவின் How to name it என்ற மேடை நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளாராகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் மூல வாத்தியக்காரராகவும் இயங்கிய அவரது சமீபத்தில் அவரது பங்களிப்புகளில் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியவை. மேடை வாசிப்புகள் தவிர, தன்னுடைய இசைப்பகிர்வுகளை  சிக்கில் குருசரண், மேண்டலின் யூ.ஶ்ரீ நிவாஸ், மேண்டலின் யூ.ராஜேஷ் உள்ளிட்ட ஆளுமைகளோடு  இசைவட்டுகள் வழியாக வெளிக்கொணர்ந்தவர்.

ஒரு இசைக்கலைஞர் என்ற வட்டத்தை மீறி, அடுத்த தலைமுறையினருக்குத் தான் கற்ற சங்கீதம் முறையாகச் சென்று சேரவேண்டும் என்ற முனைப்போடு இப்போது பல இசைப்பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரோடு கைகோர்த்து இந்தப் பணிக்காகத் தன் ஆதரவை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் தொடர்பும், அவரைப் பேட்டி எடுக்கவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அவரும் நம்மைப் போலவே இசைஞானி இளையராஜாவின் இசை குறித்துத் தீரா வேட்கை கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜா வழங்கிய இசையின் தாற்பர்யத்தைச் சொல்லி வருபவர், தன் பியானோவிலும் செய்து காட்டியவர். அந்த வகையில் மெல்பனுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கலை நிகழ்வுக்காக வருகை தந்த இவரை நண்பர் காமேஷ் அவர்களின் தொடர்பின் வழி ஒரு வானொலிப் பேட்டியை எடுக்க முடிந்தது. பேட்டி எடுக்கப்போகிறோம் என்பதையே ஒரு இருபது நிமிட அவகாசத்தில் அவருக்குத் தெரியப்படுத்தி எந்த வித முன்னேற்பாடுமின்றி அவரைப் பேச அழைத்தபோது மடை திறந்தது போலத் தன் இசையுலக அனுபவங்களில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையின் மகத்துவம் எவ்வளவு தூரம் அடுத்த தலைமுறையைச் சென்றடையவேண்டும் போன்ற மனவெளிப்பாடுகளையும் தன் இருபது நிமிடங்கள் கடந்த பேட்டியில் சொல்கிறார். கேட்டு ரசியுங்கள்.
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

இவர் வழங்கியிருந்த  Rythms Roses & Raja என்ற இசைப் பகிர்வின் சில துளிகள்



 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் பிரத்தியோகத் தளம்

http://anilsrinivasan.com/

 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் காணொளிப்பக்கம்

http://www.youtube.com/user/TheMadrasPianist