Pages

Tuesday, March 11, 2008

சிறப்பு நேயர் "எம்.ரிஷான் ஷெரிப்

போன வாரம் பாலைவன தேசத்துப் பதிவர் "பாசமலர்" வந்து ஐந்து விதமான ரசனைகளை அழகாகக் கொடுத்திருந்தார். தொடர்ந்தும் நீங்கள் இந்தத் தொடருக்கான ஆக்கங்களை அனுப்பி வைப்பது உண்மையில் இந்த முயற்சிக்கான வெற்றியாகவே கொள்கின்றேன். அரங்கேறாத உங்கள் படைப்புக்களையும் தொடர்ந்தும் நீங்கள் அனுப்பிவைக்கலாம்.அடுத்த சில நாட்களில் பயண அலுவல்கள் இருப்பதால் இந்த வாரம் சீக்கிரமாகவே இப்பதிவைத் தருகின்றேன்.

சரி இந்த வாரம் அரங்கேறும் சிறப்புப் பதிவர் யாரென்று பார்ப்போம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை வாழ் பதிவர்கள் பலரை வலைப்பதிவுலகம் வசீகரித்து உள்வாங்கிக் கொண்டது. அப்படி வந்த ஒரு பதிவர் தான் எங்கள் அன்புக்குரிய எம்.ரிஷான் ஷெரிப். தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனியான வலைத்தளம் வைத்து, சிறுகதை, கவிதை, உலக நடப்புக்கள், சிந்திக்கச் சில படங்கள், எண்ணச் சிதறல்கள் என்று வகை வகையான விருந்து படைக்கின்றார். எல்லாமே விலத்தி வைக்கமுடியாத சிறப்பான தொகுப்புக்கள். இவரின் வலைப்பதிவுகளைப் பார்வையிட எம்.ரிஷான் ஷெரிப்

ரிஷான் பாடல்களை அனுப்பி வைத்தபோது முழுதும் படித்து வியந்து போனேன். சாதாரணமாக எல்லோரும் கேட்காத, ஆனால் விலக்கி வைக்க முடியாத தெரிவுகள் இவை. காதலை ஐந்து முத்தான பாடல்கள் ஒவ்வொன்றுமே மயிலிறகாய் வரும் மெல்லிசை கலந்து வருகின்றன. தெரிந்தோ தெரியாமலோ இவர் எடுத்த ஐந்துமே ஐந்து வேறுபட்ட இசையமைப்பாளர்கள். இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து ரிஷான் சொல்வதைக் கேளுங்கள். பாடல்களை அனுபவியுங்கள்.

நண்பர் கானாபிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏராளமான பாடல்கள் விருப்பத்திற்குரிய பாடல்களாக இருந்தும் 5 பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன்.'காதல் மாதம்' என்பதால் எல்லாப்பாடல்களுமே காதல் பாடல்களாக இருக்கின்றன. (ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை... :)

1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...

படம் : இதயத் தாமரை.
பாடியவர்கள் : எஸ்.பி.பி, சித்ரா.
இசை : சங்கர் கணேஷ்


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா........
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...

மிக அழகிய காதல் பாடல்.
மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,
யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன்.
எஸ்.பி.பி கம்பீரக்குரல் காதலுக்காய்க் குழைகிறது இங்கு.
சித்ராவும் உணர்ந்து பாடி பாடலை அழகாக்கியிருக்கிறார்.
இசையும் அருமை.அதிகளவு ஆர்ப்பாட்டமில்லை.
இப்பாடல்காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அழகு.
சில பாடல்கள் கேட்க இதமாயிருக்கும்.ஆனால் காட்சிப்பதிவின் போது வீணடித்திருப்பார்கள் (உதாரணம் வசீகரா பாடல்).
இங்கு அப்படியில்லை.
இளமைக்கால ரேவதி மற்றும் கார்த்திக் காதல் ஜோடி மிகப்பொருத்தம்.
பின்புலக் காட்சிகளும் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ள இடங்களும் பேரழகு.



2.மாலையில் யாரோ மனதோடு பேச...

படம் : சத்ரியன்
பாடியவர் : சுவர்ணலதா
இசை: இளையராஜா


மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)


கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

எனக்கு மிகப்பிடித்த பாடல்.
அழகான மெல்லிசை சுவர்ணலதாவின் மிக அழகிய குரலோடு ஒன்றி பாடலை மிக அழகாக்கியிருக்கிறது.
சுவர்ணலதாவைத்தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாகப் பாட முடியாது என எண்ணவைக்கும் அளவுக்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.(இப்படி எண்ணத்தோன்றிய இவரது அடுத்த பாடல் -எவனோ ஒருவன் வாசிக்கிறான்- அலை பாயுதே).
இப்பொழுதெல்லாம் தமிழ்சினிமாவில் இவரை குத்துப்பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது வேதனையைத் தருகிறது.



3.உடையாத வெண்ணிலா...
படம் : ப்ரியம்
பாடியவர்கள் : ஹரிஹரன்,சித்ரா.
இசை: வித்யாசாகர்


உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்

(உடையாத)

அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்

ப்ரியம் ப்ரியம் (4)

(உடையாத)

இதுவும் இன்னொரு அழகிய காதல்பாடல்.
ஒவ்வொரு வரியாய் உள்வாங்கிக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
மிக அற்புதமாக உணர்வீர்கள்.
சக்ஸபோன் இசைக்கருவி பாடல்முழுதும் இழையோடுகிறது.
பாட்டின் அழகியவரிகளோடு பாடலை உணர்ந்து பாடியிருக்கிறார்கள்.



4. விழிகளின் அருகினில் வானம்...

படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்


விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
காதல் கொண்ட ஒரு இளைஞனின் அத்தனை மன உணர்வுகளையும் மிக அழகாகச் சிலவரிகளில் எடுத்துரைக்கிறது வரிகள்.வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை.அவருக்கும் ஒரு கை குலுக்கல்.
அத்துடன் பாடல் காட்சிகளில் நடித்திருக்கும் பிரசன்னா,புதுமுகம் நவ்யா நாயருக்கும்.



5.சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?

படம் : அழகன்
பாடியவர்கள் : எஸ்.பி.பி,சந்தியா
இசை: மரகதமணி

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.

என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

காதலன்,காதலி காதலில் மூழ்கித் தனிமையில் கிடந்து தவிக்கும் அத்தனை ஏக்கங்களையும் அழகாய்ச் சொல்லுகிறது பாடல்.பாடல்காட்சி முழுவதும் காதலன் (மம்மூட்டி),காதலி (பானுப்ரியா) விடியும்வரை தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பாடலும் ஒருவரின் கேள்விக்கு மற்றவரின் பதிலாய் அமைகிறது.இரவு விடிவதும் அழகாய் தொலைக்காட்சி,ஜன்னல்,காலைத் தேனீரெனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.



எனது பாடல்களெல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள்,இரைச்சலில்லாத இசை மற்றும் வார்த்தைகளை விழுங்கிப் பாடாமல் தெளிவாகப் பாடும் பாடகர்களின் குரல்கள்.என்வேதான் எனக்கிவை என்றும் பிடித்த பாடல்கள்.
இப்பாடல்களை ரேடியோஸ்பதி ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிய நண்பர் கானாபிரபாவுக்கும்,பொறுமையாய் எனது பாடல்களைக் கேட்ட உங்களுக்கும் எனது இனிய நன்றிகள்.

62 comments:

M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

எனது தெரிவுப் பாடல்களை நேரமெடுத்து அழகாகத் தந்துள்ளமைக்கு மிகவும் நன்றிகள் நண்பரே:)


என்றும் அன்புடன்,

எம்.ரிஷான் ஷெரீப்.

Prabu said...

அற்புதமான பாடல்கள் ரிஷான். மனதுக்குள் எப்போதும் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் பாடல்கள் இவை. அருமையான தேர்வு. வாழ்த்துகள்.

-த.பிரபு குமரன்

Chandravathanaa said...

அனைத்துத் தெரிகளும் அருமை.
இவற்றுள் மாலையில் யாரோ மனதோடு பேச.. எனக்க மகிவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
மற்றவையும் பிடித்த பாடல்களே.

சேதுக்கரசி said...

அருமையான தெரிவுகள். வாழ்த்துக்கள் ரிஷான். நன்றி கானா பிரபா :-) 3வது மட்டும் 5வது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

G.Ragavan said...

ஹாய் ரிஷான்... அஞ்சுமே அருமையான பாட்டுகள். எல்லாப் பாட்டுமே எனக்கும் ரொம்பப் பிடிக்கும். :)

ஒரு காதல் தேவதை... பூமியில் வந்தாள்... ஆகா....கேக்கும் போதே வந்தாப்புல இருக்குல்ல. :) எல்லாரும் இசை இளையராஜான்னு நெனைப்பாங்க. ஆனா இசை சங்கர் கணேஷ்.

மாலையில் யாரோ மலரோடு பேச....ஆகா. சொர்ணலதா பாடுறப்போ சொர்ணமழைதான் போங்க. இந்தப் பாட்டு பாக்கவும் ரொம்ப நல்லாயிருக்கும்.

உடையாத வெண்ணிலா... அழகான பாடல்..

அழகிய தீயே... ரொம்பவே அற்புதமான படம். விழிகளின் அருகினில் வானம். உண்மைதானே.. பாத்தாத் தெரியுதுன்னா பக்கத்துலதான :) நல்ல பாட்டு.

கடைசியா ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க... அது.. அது.. அது பாட்டு. கேட்டா திரும்பத் திரும்பக் கேக்க வைக்குதுங்க :)

அது சரி... பேசாம நீங்களே கதாநாயகனா நடிக்கலாமே. :) அஞ்சு பாட்டு என்ன.. படத்துக்கு அஞ்சு பாட்டு கெடைக்கும். :D

CVR said...

ஆஹா!!
அத்தனையும் இளமையும் காதல் ரசமும் சொட்டும் அழகான பாடல்கள்,எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்!!

1.)நீங்கள் சொல்வது போல மென்மையான காட்சியமைப்பு இந்த பாடலில்.மிக அழகான ஒளிய்மைப்பு /கேமரா இந்த பாடலில் கண்டு ரசிக்கலாம்.குறிப்பாக பாடலின் தொடக்கத்தில் ம்ரங்களின் நடுவே/மிதிவண்டி ஓட்டியபடி என எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் மிக அற்புதமான ஒளியமைப்பு இருக்கும்.

2.)சுவர்ணலதாவின் துடிப்புமிக்க இளமையான குரலில் அமைந்த அழகான மெலடி!! இரவில் தூங்குவதற்கு முன் சில சமயங்களில் பாடல் கருவியை காதில் சொருகிக்கொண்டு உலகை மறந்து விடுவ்து எனது பழக்கம்.அந்த மாதிரி சமயங்களில் இந்த பாடல் வந்துவிட்டால் சத்தியமாக வேறு உலகுக்கு என்னை கடத்திக்கொண்டு சென்றுவிடும் !! :-)

3.)அவ்வளவாக யாரும் கவனிக்காத பாடல் இது ஆனால் நீங்கள் சொல்லியது போல் மிக அழகான பாடல்,இந்த படத்தில் வரும் "தில்ருபா" பாடல் கூட எனக்கு மிகவும் பிடித்ததுதான்,அந்த பாடலில் நடனம் கூட ரசிக்கும் படி தான் இருக்கும்!!
//இதுவும் இன்னொரு அழகிய காதல்பாடல்.
ஒவ்வொரு வரியாய் உள்வாங்கிக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
மிக அற்புதமாக உணர்வீர்கள். /////
வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் அண்ணாச்சி!!!
காட்சிகள் கற்பனை செய்யாமலே இந்த பாடலின் அற்புதத்தை உணர முடிந்தது!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

4.)இசையின் அளுமையால் நம்ம திக்குமுக்காட வைக்காமல்,வரிகளின் அர்த்தங்களினால் நம்மை மயங்கடிக்காமல் எளிமையான இசை மற்றும் வரிகளோடு நம்மை கொள்ளை அடிக்கும் பாடல் இது!! இந்த பாடலை முதலில் கேட்டத்தை விட ,மேலும் மேலும் கேட்க கேட்கத்தான் அதன் சுவை புரிந்தது!!அதை போல பாடல் ஆரம்பம் சாதாரணமாக இருந்தாலும்,பாடலின் வேகம் கூட கூட் மெல்ல மெல்ல இசையின் ஆனந்தம் நம்ம ஆட்கொள்ள ஆரம்பித்து விடும்!!

5.)இதை முதன்முதலில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் பார்க்கும் போது,"என்ன பாட்டு இது! லூசு மாதிரி பாட்டு முழுதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்" என்று தான் நினைத்தேன்.அப்பொழுது அந்த வயதில் காதல் என்றால் திரைப்படங்களில் நடிகர்கள் டூயட் பாடுவதற்காக பயன்படும் சமாச்சாரம் என்ற அளவில் மட்டும் பரிச்சயம்.
வயது ஏற ஏற,சுற்றி பார்த்து காதல் என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்த போது இந்த பாடலையும் ரசிக்க முடிந்தது!!!
காதல் வந்தால் இதை விட பல மடங்கு லூசுத்தனங்கள் செய்வார்கள் என்று போகப்போகத்தான் தெரிந்தது!!
வாழ்க்கையே லூசுத்தனங்களின் குவியல் எனகி்ற போது அந்த குவியலிலேயே அழகான மற்றும் ரசிக்கும்படியான லூசுத்தனம் இந்த காதல் என்று தோன்றுகிறது.
அந்த அழகை நாமும் கண்டு புரிந்துக்கொண்டு ரசிக்க உதவும் பாடல்
இது!!! :-)

ஐந்தும் அசத்தலான இனிமையான பாடல்களாய் தந்து எங்கள் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டீர்கள் ரிஷான்!!
வாழ்த்துக்கள்!!!

பி.கு:கானா அண்ணாச்சி!! பதிவுல ஒரு சூப்பரு ஹீரோ படம் ஒன்னு போட்டிருக்கீங்களே !!! யாருங்க அண்ணாச்சி அது?????? :-))))

இறக்குவானை நிர்ஷன் said...

ரிஷான், அழகான பாடல்களைத் தெரிவுசெய்து அருமையான விளக்கம் தந்திருக்கிறீர்கள். உங்களுடைய வித்தியாசமான கற்பனை வளம் இதில் புலனாகிறது. கானாபிரபாவின் பங்கு பாராட்டத்தக்கது.

பிரபா,இருக்கிறம் சஞ்சிகையில் நீங்கள் நேர்கண்ட பாலமனோகரனின் பேட்டி வாசித்தேன்.அமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

ரிஷான் ஷெரீப் உங்களின் காதல் தொகுப்பு சூப்பருங்க...;)) உங்களை போலவே..! ;)

அதுவும் பாடல் வரிகளை கூடவே கொடுத்தது மிக அருமை ;)

\\ இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது.\\

தல சொன்னது போல..ரசிக்கும் படியான விளக்கம் கொடுத்திருக்கிங்க...;)

1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...

\\மிக அழகிய காதல் பாடல்.
மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,
யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன். \\

ஆகா...ஆகா....கலக்கிட்டிங்க நண்பா...பாடலும் அருமை உங்க வர்ணனை மேலும் அருமை...சூப்பர் ;)

2.மாலையில் யாரோ மனதோடு பேச...

\\எனக்கு மிகப்பிடித்த பாடல்.
அழகான மெல்லிசை சுவர்ணலதாவின் மிக அழகிய குரலோடு ஒன்றி பாடலை மிக அழகாக்கியிருக்கிறது.
சுவர்ணலதாவைத்தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாகப் பாட முடியாது என எண்ணவைக்கும் அளவுக்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.(இப்படி எண்ணத்தோன்றிய இவரது அடுத்த பாடல் -எவனோ ஒருவன் வாசிக்கிறான்- அலை பாயுதே).\\

எனக்கும் பிடித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. சுவர்சலாதாவை பற்றிய கருத்துக்கு முழுக்க முழுக்க உங்கள் கருத்துக்கு ஒத்துபோகிறேன். ;)

3.உடையாத வெண்ணிலா...

நம்ம சிவி சொன்னது போல இந்த படத்தில் வரும் அந்த தில்ருபா பாட்டு தான் அதிகம் கேட்டுயிருக்கேன். நல்ல மெலோடி பாட்டு ;)

4. விழிகளின் அருகினில் வானம்...

கையை கொடுங்க நண்பா....சூப்பர் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த படம், பாட்டு, எல்லாமே இருக்கு இதுல...;)) பாடல் வரிகளுக்கு ஒரு சிறப்பு நன்றி ;))

\\இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.\\

ஆகா...உண்மையிலேயே சிறப்பாக பாடியிருக்கிறார்..;)

\\அத்துடன் பாடல் காட்சிகளில் நடித்திருக்கும் பிரசன்னா,புதுமுகம் நவ்யா நாயருக்கும். \\

ம்ம்ம்....கடைசியில தான் நவ்யாவா!!!...

5.சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?

எனக்கு எனோ தெரியல இந்த பாட்டை கேட்ட பிடிக்கும் ஆனா பார்க்க பிடிக்காது....ஒரே ரம்பம் போடுறாங்கப்பான்னு தோணும்....;))


\\எனது பாடல்களெல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள்,இரைச்சலில்லாத இசை மற்றும் வார்த்தைகளை விழுங்கிப் பாடாமல் தெளிவாகப் பாடும் பாடகர்களின் குரல்கள்.என்வேதான் எனக்கிவை என்றும் பிடித்த பாடல்கள்.\\

அழகான தொகுப்பு ரிஷான்...மிக்க நன்றி ;))

Unknown said...

மிக அழகிய தெரிவுகள் , ரிஷான்....

4 வது பாடல் எனக்கு மிக பிடித்த பாடல்களுள் ஒன்று...

நன்றி கானா பிரபா....

மாயா said...

அழகான தொகுப்பு ரிஷான் :))

கானா அண்ணா நன்றி :)

M.Rishan Shareef said...

அன்பின் பிரபுகுமரன்,

//அற்புதமான பாடல்கள் ரிஷான். மனதுக்குள் எப்போதும் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் பாடல்கள் இவை. அருமையான தேர்வு. வாழ்த்துகள்.//


வ‌ருகைக்கும் வாழ்த்துக்க‌ளும் ந‌ன்றிக‌ள் ந‌ண்ப‌ரே... :)

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரவதனா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//அருமையான தெரிவுகள். வாழ்த்துக்கள் ரிஷான். நன்றி கானா பிரபா :-) 3வது மட்டும் 5வது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.//

வாங்க சேதுக்கரசி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

பாச மலர் / Paasa Malar said...

எல்லாப் பாடல்களுமே இனிமையானவை..
மாலையில் யாரோ, விழிகளின் அருகினில் வானம்...இந்த இரண்டும் மிகவும் பிடித்த பாடல்கள்..

M.Rishan Shareef said...

அன்பின் ராக‌வ‌ன்,
//கடைசியா ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க... அது.. அது.. அது பாட்டு. கேட்டா திரும்பத் திரும்பக் கேக்க வைக்குதுங்க :)//


உங்க‌ள் காத‌ல் கால‌மெல்லாம் நினைவுக்கு வ‌ருகிற‌தென‌ நினைக்கிறேன் :P




//அது சரி... பேசாம நீங்களே கதாநாயகனா நடிக்கலாமே. :) அஞ்சு பாட்டு என்ன.. படத்துக்கு அஞ்சு பாட்டு கெடைக்கும். :D//


ஆஹா... ஏற்கென‌வே த‌மிழ்சினிமா குற்றுயிரும்,கொலையுயிருமா இருக்கு.இதுல‌ நான் வேற‌ ந‌டிச்சு அதைக் குழி தோண்டிப் புதைச்சிட‌ணுமா?

வ‌ருகைக்கும் விரிவான‌ க‌ருத்துக்கும்,வாழ்த்துக்க‌ளுக்கும் ந‌ன்றி ந‌ண்ப‌ரே :)))

M.Rishan Shareef said...

அன்பின் CVR,

//ஆஹா!!
அத்தனையும் இளமையும் காதல் ரசமும் சொட்டும் அழகான பாடல்கள்,எனக்கும் மிகவும் பிடித்த பாடல்கள்!!

1.)நீங்கள் சொல்வது போல மென்மையான காட்சியமைப்பு இந்த பாடலில்.மிக அழகான ஒளிய்மைப்பு /கேமரா இந்த பாடலில் கண்டு ரசிக்கலாம்.குறிப்பாக பாடலின் தொடக்கத்தில் ம்ரங்களின் நடுவே/மிதிவண்டி ஓட்டியபடி என எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் மிக அற்புதமான ஒளியமைப்பு இருக்கும்.//

அட‌,ஆமாம் ந‌ண்ப‌ரே..நான் 'சொல்ல‌ ம‌ற‌ந்த‌ க‌தை'.

//2.)சுவர்ணலதாவின் துடிப்புமிக்க இளமையான குரலில் அமைந்த அழகான மெலடி!! இரவில் தூங்குவதற்கு முன் சில சமயங்களில் பாடல் கருவியை காதில் சொருகிக்கொண்டு உலகை மறந்து விடுவ்து எனது பழக்கம்.அந்த மாதிரி சமயங்களில் இந்த பாடல் வந்துவிட்டால் சத்தியமாக வேறு உலகுக்கு என்னை கடத்திக்கொண்டு சென்றுவிடும் !! :-)//


ஆமாம் ந‌ண்பா.இசையால் வ‌ச‌மாகாத‌ உள்ள‌மெது? அதிலும் சுவ‌ர்ண‌ல‌தாவின் குர‌லில் என்றும் 'இள‌மை ஊஞ்ச‌லாடும்'.

//3.)அவ்வளவாக யாரும் கவனிக்காத பாடல் இது ஆனால் நீங்கள் சொல்லியது போல் மிக அழகான பாடல்,இந்த படத்தில் வரும் "தில்ருபா" பாடல் கூட எனக்கு மிகவும் பிடித்ததுதான்,அந்த பாடலில் நடனம் கூட ரசிக்கும் படி தான் இருக்கும்!!
//இதுவும் இன்னொரு அழகிய காதல்பாடல்.
ஒவ்வொரு வரியாய் உள்வாங்கிக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
மிக அற்புதமாக உணர்வீர்கள். /////
வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் அண்ணாச்சி!!!
காட்சிகள் கற்பனை செய்யாமலே இந்த பாடலின் அற்புதத்தை உணர முடிந்தது!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)//


'தில்ரூபா பாட‌ல் என‌க்கும் பிடிக்கும் ந‌ண்ப‌ரே.பாட‌கி அனுராதா ஷ்ரீராமின் முத‌ல்பாட‌ல‌ல்ல‌வா? என‌க்கும் 'பிடிச்சிருக்கு'

//4.)இசையின் அளுமையால் நம்ம திக்குமுக்காட வைக்காமல்,வரிகளின் அர்த்தங்களினால் நம்மை மயங்கடிக்காமல் எளிமையான இசை மற்றும் வரிகளோடு நம்மை கொள்ளை அடிக்கும் பாடல் இது!! இந்த பாடலை முதலில் கேட்டத்தை விட ,மேலும் மேலும் கேட்க கேட்கத்தான் அதன் சுவை புரிந்தது!!அதை போல பாடல் ஆரம்பம் சாதாரணமாக இருந்தாலும்,பாடலின் வேகம் கூட கூட் மெல்ல மெல்ல இசையின் ஆனந்தம் நம்ம ஆட்கொள்ள ஆரம்பித்து விடும்!!//

ஆமாம்.நிச்ச‌ய‌மாக‌ :).சில‌ பாட‌ல்க‌ள் கால‌ம் க‌ட‌ந்தும் வ‌ரிக‌ளோடு ம‌ன‌தில் நிற்கும்.என்றும் ம‌ற‌க்க‌முடியாது 'நெஞ்சிருக்கும் வ‌ரை.'

//5.)இதை முதன்முதலில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் பார்க்கும் போது,"என்ன பாட்டு இது! லூசு மாதிரி பாட்டு முழுதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்" என்று தான் நினைத்தேன்.அப்பொழுது அந்த வயதில் காதல் என்றால் திரைப்படங்களில் நடிகர்கள் டூயட் பாடுவதற்காக பயன்படும் சமாச்சாரம் என்ற அளவில் மட்டும் பரிச்சயம்.
வயது ஏற ஏற,சுற்றி பார்த்து காதல் என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்த போது இந்த பாடலையும் ரசிக்க முடிந்தது!!!//

என‌க்கும் அதேதான்.


//காதல் வந்தால் இதை விட பல மடங்கு லூசுத்தனங்கள் செய்வார்கள் என்று போகப்போகத்தான் தெரிந்தது!!//


'அனுப‌வ‌ம் பேசுகிற‌து' ????????

//வாழ்க்கையே லூசுத்தனங்களின் குவியல் எனகி்ற போது அந்த குவியலிலேயே அழகான மற்றும் ரசிக்கும்படியான லூசுத்தனம் இந்த காதல் என்று தோன்றுகிறது.
அந்த அழகை நாமும் கண்டு புரிந்துக்கொண்டு ரசிக்க உதவும் பாடல்
இது!!! :-)




ஐந்தும் அசத்தலான இனிமையான பாடல்களாய் தந்து எங்கள் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டீர்கள் ரிஷான்!!//


எனதும் 'உள்ள‌ம் கொள்ளை போகுதே!' :)

வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துக்க‌ளுக்கும்,வ‌ருகைக்கும்,நீண்ட‌ க‌ருத்துக்கும் மிக‌வும் ந‌ன்றிக‌ள் ந‌ண்பா :)))


பி.கு:கானா அண்ணாச்சி!! பதிவுல ஒரு சூப்பரு ஹீரோ படம் ஒன்னு போட்டிருக்கீங்களே !!! யாருங்க அண்ணாச்சி அது?????? :-))))


அவ‌ர் பேரு பிர‌ச‌ன்னா.ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌து ந‌வ்யா நாய‌ர் :))))

M.Rishan Shareef said...

//இறக்குவானை நிர்ஷன் said...
ரிஷான், அழகான பாடல்களைத் தெரிவுசெய்து அருமையான விளக்கம் தந்திருக்கிறீர்கள். உங்களுடைய வித்தியாசமான கற்பனை வளம் இதில் புலனாகிறது. //

அன்பின் நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

//கானாபிரபாவின் பங்கு பாராட்டத்தக்கது.//


நிச்சயமாக.நான் கொடுத்த பாடல்களையெல்லாம் அவரது அத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில் தேடி அருமையாகத் தந்திருப்பதோடு,பதிவிட்டதன் மூலம் நல்ல அருமையான நண்பர்களை அடையாளம் காட்டித் தந்திருக்கிறார்.


நன்றிகளோடு,பாராட்டுக்களெல்லாம் அவரையே சாரும்.

M.Rishan Shareef said...

வாங்க கோபிநாத் :) ,

//ரிஷான் ஷெரீப் உங்களின் காதல் தொகுப்பு சூப்பருங்க...;)) உங்களை போலவே..! ;)//


முதல்லயே ஐஸ் வச்சுடறீங்களே :P

//அதுவும் பாடல் வரிகளை கூடவே கொடுத்தது மிக அருமை ;)//


கேக்குறவங்களுக்குப் பாடிப்பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் பாடல்களிவை.எனவே தான் :))

//\\ இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது.\\

தல சொன்னது போல..ரசிக்கும் படியான விளக்கம் கொடுத்திருக்கிங்க...;)//


உங்களுக்கும் பழைய அனுபவங்கள் நினைவுக்கு வருகுதுன்னு நினைக்கிறேன் :)))

1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...

\\மிக அழகிய காதல் பாடல்.
மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,
யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன். \\

ஆகா...ஆகா....கலக்கிட்டிங்க நண்பா...பாடலும் அருமை உங்க வர்ணனை மேலும் அருமை...சூப்பர் ;)

2.மாலையில் யாரோ மனதோடு பேச...

\\எனக்கு மிகப்பிடித்த பாடல்.
அழகான மெல்லிசை சுவர்ணலதாவின் மிக அழகிய குரலோடு ஒன்றி பாடலை மிக அழகாக்கியிருக்கிறது.
சுவர்ணலதாவைத்தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாகப் பாட முடியாது என எண்ணவைக்கும் அளவுக்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.(இப்படி எண்ணத்தோன்றிய இவரது அடுத்த பாடல் -எவனோ ஒருவன் வாசிக்கிறான்- அலை பாயுதே).\\

எனக்கும் பிடித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. சுவர்சலாதாவை பற்றிய கருத்துக்கு முழுக்க முழுக்க உங்கள் கருத்துக்கு ஒத்துபோகிறேன். ;)

3.உடையாத வெண்ணிலா...

நம்ம சிவி சொன்னது போல இந்த படத்தில் வரும் அந்த தில்ருபா பாட்டு தான் அதிகம் கேட்டுயிருக்கேன். நல்ல மெலோடி பாட்டு ;)

4. விழிகளின் அருகினில் வானம்...

கையை கொடுங்க நண்பா....சூப்பர் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த படம், பாட்டு, எல்லாமே இருக்கு இதுல...;)) பாடல் வரிகளுக்கு ஒரு சிறப்பு நன்றி ;))

\\இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.\\

ஆகா...உண்மையிலேயே சிறப்பாக பாடியிருக்கிறார்..;)

\\அத்துடன் பாடல் காட்சிகளில் நடித்திருக்கும் பிரசன்னா,புதுமுகம் நவ்யா நாயருக்கும். \\

ம்ம்ம்....கடைசியில தான் நவ்யாவா!!!...//

அட,ரொம்ப கவலைப் படுறீங்களே :))))

5.சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?

எனக்கு எனோ தெரியல இந்த பாட்டை கேட்ட பிடிக்கும் ஆனா பார்க்க பிடிக்காது....ஒரே ரம்பம் போடுறாங்கப்பான்னு தோணும்....;))


\\எனது பாடல்களெல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள்,இரைச்சலில்லாத இசை மற்றும் வார்த்தைகளை விழுங்கிப் பாடாமல் தெளிவாகப் பாடும் பாடகர்களின் குரல்கள்.என்வேதான் எனக்கிவை என்றும் பிடித்த பாடல்கள்.\\

அழகான தொகுப்பு ரிஷான்...மிக்க நன்றி ;))//

உங்கள் கருத்தினை நான் மிக ரசித்தேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)))

M.Rishan Shareef said...

அன்பின் பேரரசன்,


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)))

M.Rishan Shareef said...

அன்பின் மாயா,


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)))

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)))

Anonymous said...

முதலாவதுத் தெரிவைத் தவிர அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்திருக்கன்றன!

தெரிவு செய்த, மற்றும் பதிவிலிட்டவர்களுக்கு பாராட்டுக்கள்.

-ஸ்வீட்சுரேஷ்

CVR said...

///பி.கு:கானா அண்ணாச்சி!! பதிவுல ஒரு சூப்பரு ஹீரோ படம் ஒன்னு போட்டிருக்கீங்களே !!! யாருங்க அண்ணாச்சி அது?????? :-))))


அவ‌ர் பேரு பிர‌ச‌ன்னா.ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌து ந‌வ்யா நாய‌ர் :))))////

:P

சோக்கு சொல்றாராம்ல சோக்கு!!
பிரசன்னா தான் எல்லொருக்கும் தெரியுமே!! நான் கேட்டது இராண்டாவது படத்திலிருப்பவரை!!! (அப்படியே தெரியாதது போல)

pudugaithendral said...

அருமையானப்பாடல் தெரிவுகள்.

வாழ்த்துக்கள்

KARTHIK said...

வணக்கம் ஷெரிப்

நமது வயது ஏற ஏற நமது ரசனைகளும் மாறுபாடுவதற்கு பாடல் பற்றிய இப்பின்னூடங்களே சான்று.

4.அழகிய தீயே
விழிகளின் அருகினில் வானம்...
இப் பாடல் எனக்கு பிடித்ததற்கு பல காரணங்கள்லுண்டு அதில் என்னக்கு மிகவும் பிடித்தவரி

//பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா! //

இதயத் தாமரை.

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...

//ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்.. //

சொக்கவேக்கும் வரிகள்

அழகன்

சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?

அருமையான பாடல்

கானா பிரபா மற்றும் ஷெரிப அவர்களுக்கு எனது நன்றிகள

KARTHIK said...

//அது சரி... பேசாம நீங்களே கதாநாயகனா நடிக்கலாமே//

அதானே

வல்லிசிம்ஹன் said...

ரிஷ்ஆன், பிரபா,

வெகு அருமையான தேர்வு.

விழிகளில் அருகினில் வானம் பாட்டு எத்தனை கேட்பேன் என்று எனக்கே தெரியாது.
மனம் கனப்படும்போது உடனே ராகா.காம் போய் இந்தப் பாடலைத் தேடுவேன்.

இந்தப் பாடல் எனக்கெ சிடியாகக் கிடைத்ததும்
மீண்டும் மீண்டும் கேட்பேன்.
இந்த ரமேஷ் விநாயகம் ஏன் பிரபலமாகவில்லை என்று வருத்தப்படுவேன்.

அருமை அருமை அப்படியொரு அருமை இந்தப் பாடல்.
அதே போல் இங்கெ இரவு அங்கெ பகலா என்னவோ மயக்கம் என்று வரும் அந்த அழகன்
படப் பாடல், முடியும் போது வரும் தூர்தர்ஷன் இசை எல்லாமே
வெகு உணர்வுகளை எழுப்பும்.
மிக்க நன்றி.
உங்கள் இருவருக்குமே.

வல்லிசிம்ஹன் said...

ரிஷ்ஆன், பிரபா

பாடல் வரிகளைக் கொடுத்ததும் ஒரு அதிசய இன்பம்.

மிகுந்த நன்றி அதிகமாகச் சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
விழிகளின் அருகினில் வானம் பாடலில்

ஒரு பெண்ணின் நினைவு என்ன செய்யும்?
என்னைக் கத்தியில்லாமல் கொய்யும் //
என்ற வரிகள் அருமை.
இதில் மீள வழியுள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது//
இந்த வார்த்தைகளும் ஒரு காதலின்
இயலாமையை விளக்கும்:)

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்வீட்சுரேஷ்,

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் புதுகைத் தென்றல் ,

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ந‌ண்ப‌ரே :)

M.Rishan Shareef said...

//அது சரி... பேசாம நீங்களே கதாநாயகனா நடிக்கலாமே//

நல்லா ஏத்தி விடுறீங்கப்பா போதைய :)

M.Rishan Shareef said...

//ரிஷ்ஆன், பிரபா,

வெகு அருமையான தேர்வு.

விழிகளில் அருகினில் வானம் பாட்டு எத்தனை கேட்பேன் என்று எனக்கே தெரியாது.
மனம் கனப்படும்போது உடனே ராகா.காம் போய் இந்தப் பாடலைத் தேடுவேன்.

இந்தப் பாடல் எனக்கெ சிடியாகக் கிடைத்ததும்
மீண்டும் மீண்டும் கேட்பேன்.
இந்த ரமேஷ் விநாயகம் ஏன் பிரபலமாகவில்லை என்று வருத்தப்படுவேன்.//


அது ஏனோ தெரிய‌வில்லை வ‌ல்லிசிம்ஹ‌ன்.என‌க்கு வ‌ரும் த‌னிப்ப‌ட்ட‌ மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் கூட‌ நிறைய‌ப் பேருக்கு இந்த‌ப்பாட‌லைப் பிடித்திருப்ப‌தாய் சொல்கிறார்க‌ள்.
அத‌ன் இசையும்,வ‌ரிக‌ளும்,குர‌லும் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.
ர‌மேஷ் விநாய‌க‌த்துக்கு அழ‌கான‌,மென்மையான‌ குர‌ல்.அத‌னால்தான் பிர‌ப‌ல‌மாக‌வில்லையோ என்ன‌மோ? இப்படத்திற்கு அவ‌ர்தான் இசைய‌மைப்பாள‌ரும் கூட‌ .

//பாடல் வரிகளைக் கொடுத்ததும் ஒரு அதிசய இன்பம்.
விழிகளின் அருகினில் வானம் பாடலில்

ஒரு பெண்ணின் நினைவு என்ன செய்யும்?
என்னைக் கத்தியில்லாமல் கொய்யும் //
என்ற வரிகள் அருமை.
இதில் மீள வழியுள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது//
இந்த வார்த்தைகளும் ஒரு காதலின்
இயலாமையை விளக்கும்:)//


மிகுந்த‌ ர‌ச‌னைக்குரிய‌வ‌ராக‌ இருக்கிறீர்க‌ள் நீங்க‌ள் ந‌ண்ப‌ரே :)


வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும் ந‌ன்றி ந‌ண்ப‌ரே :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான், எல்லாமே நல்ல பாடல்கள்...!

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

Anonymous said...

மிக நல்ல பாடல்கள் ரிஷான். தாங்கள் தேர்ந்தெடுத்த பாடல்களில் தங்களின் ரசனை தெரிகின்றது...

Anonymous said...

ரிஷான்,

உங்கள் பாடல்கள் ஐந்துமே சுவையானவை.
அதில் எனக்குப் பிடித்தவை(மிகவும்)

விழிகளின் அருகினில் வானமும்,

சங்கித ஸ்வரங்கள் ஏழே கணக்கா..யும்தான்.
பதிவே அழகான பாடல் சரமாக மின்னி விட்டது.
வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

மாலையில் யாரோ மனதோடு பேச......ரொம்பப்பிடிச்ச பாட்டு..அதை நீங்க தேர்வு செய்ததில் மகிழ்ச்சி,,திரும்ப 4தடவை கேட்டேன்..நன்றி கானாபிரபாக்கும் உங்களுக்கும்.

Anonymous said...

Hi Rishan
This is rajan of Orkut. Wow a very nice explanaion about these songs. Today only i view and hear in another view of this song. Thanks and god bless you my dear

எழில்பாரதி said...

ரிஷான்!!!

தேர்வு செய்த பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை!!!!!

மிகவும் ரசித்தேன்!!!!

Anonymous said...

தம்பி ரிஷான்
உங்கள் விளக்கத்தைப் பார்த்த பின்னர் தான் அதில் சில பாடல்களை முதன் முதலாகக் கேட்கிறேன்.

இத்தனை காதல் பாடல்களையும் தெரிவு செய்து அனுபவித்து எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல உள்ளது :)

" ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை... :) "

இது 100 சதவீத உண்மை என்று நாங்கள் நம்புகிறோம் :)

Anonymous said...

வாழ்த்துக்கள், ரிஷான். அப்போ அடுத்த வாரம் யாருடைய வாரம்? ;-)

அராதா.

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான். நீங்கள் தொகுத்திருந்த அத்தனை பாடல்களும் அருமையான பாடல்கள்.

-த.பிரபு குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹாய் ரிஷான்
//இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள், இரைச்சலில்லாத இசை//

சூப்பர்...பாட்டின் வரியையும் சேர்த்து அனுபவிக்கும் போது தான் உள்ளம் கொள்ளை போகுது இல்லியா?
வரிகள்=மூளைக்கு, இசை=இதயத்துக்குப் போகுமோ?

எல்லாஞ் சரி! அத்தனையும் காதல் பாடல்களாக தொகுத்தது ஏன் என்கிற உண்மை பிப்-14 மட்டும் தானா என்ன? :-))

//சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா//
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்! அதுவும் முடிவில் இந்தியத் தொலைக்காட்சியின் ஆரம்ப இசையை மிகவும் இயல்பாக இணைத்திருப்பார்கள்!

நம்ம கோபிநாத் சொல்றதைக் கண்டுக்காதீங்க! இந்தப் பாட்டைக் கேட்கவும் பிடிக்கும்! பார்க்கவும் பிடிக்கும்! அதெல்லாம் காதலிச்சிப் பார்த்திருந்தா தானாத் தெரியும்! :-))))

இரவு முழுதும் ஒருவரின் குரலே இன்னொருவருக்குத் துணை! என்னென்ன இடங்கள், தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா என்று அவன் கேட்பதும், அதற்கு அவள் பதில் சொல்வதும்.....
நம் இன்னொரு நண்பரும் ரசித்துச் சொன்னது போல்...
The world is ever crazy,
but crazy when breezy,
stays rosy in our hearts! :-))

//விழிகளின் அருகினில் வானம்//

என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா! என்று பாடும் போதே...பாடலின் ஜீவன் தெரிந்து விடும்! இதை முதலில் கேட்டுவிட்டுப் பிடிக்காமல் போனவர்கள் துரதிருஷ்டசாலிகள் என்று தான் சொல்லுவேன் ரிஷான்! இன்னொரு முறை கேட்போமே என்று உட்கார்ந்தால் இதன் மெல்லிய இசையும் வைர வரியும் பிடிபட்டுப் போகும்!
கழுத்தைப் பரதநாட்டியம் ஸ்டைலில் நவ்யாவைப் போலவே பிரசன்னா அசைப்பார். சுளுக்கிக்கும்! :-)

//வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை.அவருக்கும் ஒரு கை குலுக்கல்//

அவரு பேரு கவிவர்மன்!
என்னோடு பாட்டு பாடுங்கள் - ஜெயா டிவியில் SPB நடத்தும் போட்டி நிகழ்ச்சியின் டைட்டில் சாங்கும் இவர் தான் எழுதினார்! இப்ப கை குலுக்குங்க! :-))

//உடையாத வெண்ணிலா//

சாக்ஸ் இசைக்காகவே பல முறை கேட்ட பாடல்! காதலைக் காதலாய் வெளிப்படுத்த என்றே வந்த இசைக்கருவிகள் - புல்லாங்குழல் மற்றும் சாக்ஸ் என்று முடிவுக்கு வரலாமா-ன்னு யோசிக்கிறேன்!
ப்ரியம் பிரியம் என்று வரும் போதெல்லாம் கூடவே அந்த சாக்ஸ் முழங்கும் பாருங்க! வாவ்!

//மாலையில் யாரோ மனதோடு பேச//

ஸ்வர்ணலதா பாடும் போது அதிர்வலைகளுடன் பாடக் கூடிய அற்புதமான கலைஞர்! இவரைத் திரையிசை அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது என் வருத்தமும் கூட!

இது ஒரு அதி அற்புதமான இரவுப் பாடல்! இச் இச் இச்-ன்னு வரும்ங்க இசைக்கருவி ஒவ்வொரு வரியிலும்! அந்த இசைக்கு மயங்கி கிறங்கி உறங்கிப் போய் இருக்கேன்! கையில் வைத்து உருட்டும் கருவி அது! பேர் என்ன ரிஷான்?

//ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...//

சங்கர் கணேஷின் கலக்கல்ஸில் இதுவும் ஒன்னு! நீங்கள் சொன்னது போல் பாடல் காட்சிகளும் அருமையா இருக்கும்!

கானா அண்ணாச்சி
தீபிகா படுகோனே வச்சி நீங்க எடுக்கப் போகும் அடுத்த படத்துக்கு நாயகனா ரிஷானையே போட்டுருங்களேன் ! :-)

M.Rishan Shareef said...

அன்பின் சிவா,

வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நிலாரசிகன்,

வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி சுதன்,

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி சுதன்,

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் ரேவ‌தி ந‌ர‌சிம்ம‌ன்,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் சைல‌ஜா,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் எழில்பார‌தி,

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

Dear Rajan,

Thanks a lot for visit and comment dude :)

Anonymous said...

VERY NICE COLLECTION RISHI...AS U R THE GEM OF POETRY SO UR TASTES...

KEEP ROCKING....

;)

M.Rishan Shareef said...

அன்பின் கண்ணபிரான் ரவி ஷங்கர்,


//எல்லாஞ் சரி! அத்தனையும் காதல் பாடல்களாக தொகுத்தது ஏன் என்கிற உண்மை பிப்-14 மட்டும் தானா என்ன? :-))//


ஆமாம்.வேறு ஏதும் விஷேட‌ங்க‌ள் இல்லை ந‌ண்ப‌ரே.
நான் சொல்வ‌தெல்லாம் உண்மை.உண்மையைத் த‌விர‌ வேறெதுவும் இல்லை... :)

//நம்ம கோபிநாத் சொல்றதைக் கண்டுக்காதீங்க! இந்தப் பாட்டைக் கேட்கவும் பிடிக்கும்! பார்க்கவும் பிடிக்கும்! அதெல்லாம் காதலிச்சிப் பார்த்திருந்தா தானாத் தெரியும்! :-))))//


க‌ண்ண‌பிரான்,அப்போ ஏராள‌மான‌ அனுப‌வ‌ங்க‌ள் போலிருக்கு உங்க‌ளுக்கு?

//அவரு பேரு கவிவர்மன்!
என்னோடு பாட்டு பாடுங்கள் - ஜெயா டிவியில் SPB நடத்தும் போட்டி நிகழ்ச்சியின் டைட்டில் சாங்கும் இவர் தான் எழுதினார்! இப்ப கை குலுக்குங்க! :-))//

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ந‌ண்ப‌ரே :)
நிச்ச‌ய‌மாக‌ அவ‌ருட‌ன் கைகுலுக்க‌ வேண்டும்.

//ப்ரியம் பிரியம் என்று வரும் போதெல்லாம் கூடவே அந்த சாக்ஸ் முழங்கும் பாருங்க! வாவ்!//

அதே அதே... :)

//இது ஒரு அதி அற்புதமான இரவுப் பாடல்! இச் இச் இச்-ன்னு வரும்ங்க இசைக்கருவி ஒவ்வொரு வரியிலும்! அந்த இசைக்கு மயங்கி கிறங்கி உறங்கிப் போய் இருக்கேன்! கையில் வைத்து உருட்டும் கருவி அது! பேர் என்ன ரிஷான்?//


வாவ்.என‌க்கும் அந்த வாத்தியக்க‌ருவி மிக‌வும் பிடிக்கும்.ஆனால் என‌க்கு அத‌ன் பெய‌ர் தெரிய‌வில்லை.ந‌ண்ப‌ர் கானாபிர‌பாதான் உத‌விக்கு வ‌ர‌வேண்டும்... :)


//கானா அண்ணாச்சி
தீபிகா படுகோனே வச்சி நீங்க எடுக்கப் போகும் அடுத்த படத்துக்கு நாயகனா ரிஷானையே போட்டுருங்களேன் ! :-) //


ந‌ண்பா க‌ண்ண‌பிரான்,க‌டைசி வ‌ரைக்கும் உங்க‌ ம‌ன‌சுக்குள்ள‌ இப்ப‌டியொரு கொல‌வெறி இருக்கும்ற‌த என்னால‌ க‌ண்டுபிடிக்க‌ முடியாம‌ப் போச்சே :P

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ந‌ண்பா :)))‌

M.Rishan Shareef said...

அன்பின் ச‌கோத‌ரி ப‌ஹீமாஜ‌ஹான்,
//தம்பி ரிஷான்
உங்கள் விளக்கத்தைப் பார்த்த பின்னர் தான் அதில் சில பாடல்களை முதன் முதலாகக் கேட்கிறேன்.//


அப்பாடா,என‌து தெரிவாக‌ ந‌ல்ல‌ க‌விவ‌ரிக‌ளுடைய‌ பாட‌ல்க‌ளை உங்க‌ளைக் கேட்க‌வைத்த‌தில் ம‌கிழ்ச்சி ச‌கோத‌ரி :)

இத்தனை காதல் பாடல்களையும் தெரிவு செய்து அனுபவித்து எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல உள்ளது :)


ஆஹா...நீங்க‌ளுமா?

" ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை... :) "

இது 100 சதவீத உண்மை என்று நாங்கள் நம்புகிறோம் :)


எல்லோரும் ஒரு குரூப்பாத்தான் கிசு கிசுவெல்லாம் கிள‌ப்பிடுறீங்க‌ போலிருக்கு :P

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ச‌கோத‌ரி :)
உங்க‌ளுடைய‌ தெரிவுக‌ளைக் காண‌வும் ஆவ‌லாக‌ உள்ளேன்...!

நாமக்கல் சிபி said...

அருமையான தெரிவுகள் ரிஷான்!

முதல் மூன்று பாடல்கள் எப்பவுமே என் விருப்பப் பட்டியலில் உண்டு!

மற்றா இரண்டும் அவ்வளவாய்க் கேட்டதில்லை!

இப்போது கேட்டதில் அவையும் பிடித்திருக்கின்றன

அருமையான தெரிவுகளுக்கு நன்றி ஷெரீப்

M.Rishan Shareef said...

அன்பின் சிபி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

5 PADALKALUM AZHAKU UNGALAIP POLAVE RISHAN.

MHMMM......YARUKKUK KODUTHTHU VAITHTHIRUKKO ?

பாரதிய நவீன இளவரசன் said...

ரகுவரன்-சுமலதா நடித்த 'ஒரு ஓடை நதியாகிறது' பாடற்காட்சியான ‘தலையைக் குனியும் தாமரையே...” (SPபாலசுப்ரமணியன்) பாடலையோ அல்லது அதே படத்தில் இடம் பெற்ற ‘தென்றல் வந்து என்னைத் தொட்டது...’ (SN சுரேந்தர்) பாடலையோ ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்,
வலையேற்றுமாறு கானா பிரபா அவர்களை தாழ்மையுடன் கொள்கிறேன்.

M.Rishan Shareef said...

நன்றி விஷால்.

★彡єνєя ѕmιlє★彡 said...

இந்த ஐந்து பாடலும் முத்தான பாடல், 1000 முறை கேட்டாலும் சலிக்காது உன் கவிதைளைப் போன்று. உன் எழுத்துக்கு பிறகே அதன் அழுத்தம் புரிந்தது எனக்கு. மிக்க நன்றி நண்பா!!!

Unknown said...

//smilingsmilers said...
இந்த ஐந்து பாடலும் முத்தான பாடல், 1000 முறை கேட்டாலும் சலிக்காது உன் கவிதைளைப் போன்று. உன் எழுத்துக்கு பிறகே அதன் அழுத்தம் புரிந்தது எனக்கு. மிக்க நன்றி நண்பா!!! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)