Pages

Monday, October 29, 2007

வி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2


வி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க

தொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.

முதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் "கல்யாண அகதிகள்" திரையில் இருந்து சுசீலா பாடும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்",

அடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்". இத்திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.

தொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான "ரயில் சினேகம்" படைப்பில் "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.

"தாமரை நெஞ்சம்" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் "முகிலு மல்லிகே" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.

அடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த "பாச மலர்கள்" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான "செண்பகப் பூவைப் பார்த்து" என்ற பாடல் ஒலிக்கின்றது.

நிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.
தொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்



இந்தத் தொகுப்பை வெளியிடும் போது "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான " இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.

Thursday, October 25, 2007

றேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.

கடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்கே வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.

சரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.
இங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.

இந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்

மேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். "ஆறிலிருந்து அறுபது வரை" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))

Wednesday, October 24, 2007

"அழியாத கோலங்கள்" பாடல் பிறந்த கதை


அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்

Tuesday, October 16, 2007

ராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை


ஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.

பி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)

ஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போடேலாதப்பா

Sunday, October 14, 2007

பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு

முந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

சரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.

சரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்
உங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))

தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.
இதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் "ரோஜா பூ தோடி வந்தது" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலதிகமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.

இதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் கீழே தருகின்றேன்.

பாடலின்ஒளிப்படம் காண




றேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?


கடந்த யூலை மாதம் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணன், நிஷாத் ஆகியோர் சிட்னி வந்து இனியதொரு இசை விருந்தை அளித்திருந்தார்கள். பாடகி சித்ராவே நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்து வழங்கிய நிகழ்வு என்பதால் பாடல்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பல சுவையான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே போனது இன்னும் சுவையாக இருந்தது. சொல்லப்போனால் இப்படியான இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் ரசிப்பது, பாடகர்கள் தாம் அடைந்த அனுபவங்களைச் சொல்லிப் பாடுவது தான். சித்ராவின் இசை நிகழ்ச்சி குறித்துக் குறிப்பெடுத்துக் கொண்டாலும் நேர காலம் கனிந்து வராததால் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவை நான் தரவில்லை. அவ்வப்போது அவற்றை நான் தொடரும் பதிவுகளில் பகிர்வேன்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் சித்ரா சொன்ன ஒரு சம்பவத்தை இங்கே கேள்வியாக வைக்கின்றேன். பார்ப்போம் எத்தனை பேர் சரியாகச் சொல்கின்றீர்கள் என்று.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

அந்த ஆர்மோனிய இசையின் ஒலித்துண்டத்தைக் கீழே இணைத்திருக்கின்றேன்.
கேட்டு விட்டுச் சொல்லுங்களேன், பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாடல் எதுவாக இருக்குமென்று.

Thursday, October 11, 2007

நீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்



தமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.

காதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.

பாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.

இந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.

ஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.

"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.

இந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.

http://www.petitiononline.com/msv2008/petition.html


இந்த வார நீங்கள் கேட்டவை பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.

முதலில் வருவது "கிருஷ்ண கானம்" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து "ஆயர் பாடி மாளிகையில்" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.
Get this widget | Track details | eSnips Social DNA


தொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு "முத்தான முத்தல்லவோ" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்த பாடல் "பூக்காரி" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி "காதலின் பொன் வீதியில்" என்று பாடுகின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


அடுத்ததாக "சிம்லா ஸ்பெஷல்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "உனக்கென்ன மேலே நின்றாய்" என்ற பாடல் வருகின்றது.
Get this widget | Track details | eSnips Social DNA


நிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் "கீழ் வானம் சிவக்கும்" , T.M செளந்தரராஜன் பாடும் "கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே"
இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே http://www.petitiononline.com/msv2008/petition.html">ONLINE PETITION னில் கீ நாட்டு வையுங்க.

வட்டா ;-)))
Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 4, 2007

நீங்கள் கேட்டவை 22


வழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.

இன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் "அமுதே தமிழே எனதுயிரே" என்ற பாடல் "கோயில் புறா" திரைக்காக ஒலிக்கின்றது.

அடுத்ததாக சந்தன முல்லை, "பயணங்கள் முடிவதில்லை" திரையில் இருந்து "சாலையோரம் சோலை" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.

தொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் "கிழக்குக் கரை" திரையில் இருந்து சித்ரா பாடும் "சிலு சிலுவெனக் காத்து" தேவாவின் இசையில் மலர்கின்றது.

நிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் "மணிச்சித்ர தாளு" என்ற மலையாளத் திரையில் இருந்து "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.
இப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))

Powered by eSnips.com